July 11, 2017
இந்திய அணியின் புதிய பயிற்சியாளரானார் ரவி சாஸ்திரி !
இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டுள்ளார்.
அனில் கும்ளேவின் பதவி காலம் சாம்பியன் டிராபி தொடரோடு முடிவடைந்த நிலையில், பிசிசிஐ அவரது பதவியை நீட்டித்தது. ஆனால் கோலிக்கும் கும்ளேவிற்கு இடையே ஏற்பட்ட மனகசப்பு காரணமாக கும்ப்ளே பதவி விலகினார்.
இதனையடுத்து அடுத்த பயிற்சியாளரை நியமிக்கும் இக்கட்டில் இருந்தது பிசிசிஐ. பயிற்சியாளர் பதவிக்கு சேவாக், ரவி சாஸ்திரி உள்பட 6 பேர் விண்ணப்பித்தனர். இந்த முறையும் பயிற்சியாளரை கங்குலி, லட்சுமணன் மற்றும் சச்சின் ஆகிய மூவர் அடங்கிய குழுதான் தேர்வு செய்துள்ளது. தேர்வு குழுவின் விருப்பம் சேவாக் ஆக இருந்தபோது கேப்டன் கோலியுடன் கலந்துரையாடி முடிக்க எடுக்கப்படும் என்று கங்குலி தெரிவித்தார். அதன்படி தற்போது ரவி சாஸ்திரி இந்திய அணியின் பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ரவி சாஸ்திரி இந்தியா - இலங்கை இடையே நடைப்பெறும் தொடரில் இருந்து தனது பணியை தொடங்குவார் என தெரிகிறது. மேலும் இவரது பதவிக்காலம் 2019ஆம் ஆண்டு உலக கோப்பை வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணியின் புதிய பயிற்சியாளரானார் ரவி சாஸ்திரி !
Reviewed by Admin
on
July 11, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.