May 11, 2017
"செத்தும் கொடை கொடுத்த" எலக்ட்ரீஷியன். உடல் உறுப்புகள் தானம்: 7 பேருக்கு மறுவாழ்வு
சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த எலக்ட்ரீஷியனின் உடல் உறுப்புகளை தானமாக வழங்கியதன் மூலம் 7 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.
வடவள்ளி அருகே லிங்கனூர், சொக்கலிங்க முதலியார் வீதியைச் சேர்ந்தவர் கே.சண்முகசுந்தரம் (53). இவர் தென்னம்பாளையத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் கடந்த மே 6-ஆம் தேதி வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
நீலாம்பூர் அருகே சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்டார். இந்த விபத்தில் தலையில் பலத்த காயத்துடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், சண்முகசுந்தரம் செவ்வாய்க்கிழமை மூளைச்சாவு அடைந்ததாக அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்க அவரது குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து அவரது உடலில் இருந்து கல்லீரல், நுரையீரல், இதய வால்வுகள், இரண்டு சிறுநீரகங்கள், கண்கள் ஆகியவை புதன்கிழமை அகற்றப்பட்டு சென்னை, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தானமாக வழங்கப்பட்டது.
"செத்தும் கொடை கொடுத்த" எலக்ட்ரீஷியன். உடல் உறுப்புகள் தானம்: 7 பேருக்கு மறுவாழ்வு
Reviewed by மறத்தமிழன்
on
May 11, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.