January 8, 2017
தேவடியா பேசறேன் என்ன அப்படி பாக்கறீங்க !
தேவடியா பேசறேன் என்ன அப்படி பாக்கறீங்க !
நீங்க வச்சபேரு அது
என்பேர் தமிழ் அழகி
நீங்க வச்ச பேரு வக்கற பேரு அழகி அயிட்டம் சோலு மேட்டர் விலைமாது விலைமகள் விபச்சாரி
இன்னும் நாகரீகமா பாலியல் தொழிலாளி
நீங்க எனக்கு என்ன வேணா பேர் வைங்கடா
எனக்கு கவலையில்ல
நான் உத்தமிதான் பத்தினிதான்
அட ஆச்சர்யமா இருக்கா ஆமான்டா நா உத்தம பத்தினிதான்
உங்களைபோலதான் நானும் மனுசி தான்
எம்மாமன் மேல அம்புட்டு ஆசை அவருக்கும் எம்மேல அம்புட்டு ஆசை
கல்யாணங்கட்டிக்கிட்டோம்
ஒத்த பொன் குழந்தை நிம்மதியாத்தான் வாழ்ந்தோம்
என் கிராமத்துல மூனு தறுதலைங்க
என்ன சீண்டிகிட்டே இருந்தது க
நானும் எம் மாமங்கிட்ட இத ஒரு விசயமா
சொல்லவேண்டாமுணு
சொல்லல போ வயசுக்கோளாறு திருந்திக்குவானுக னு நெனைச்சேன்
ஒரு நா குடிபோதையில
அந்த மூனுல ஒருத்தன் ஒருநாளைக்காவது
கிடைக்குமானு பல்லிலிச்சான்
செருப்பு பிஞ்சுடும்னு சொல்லிட்டு வந்துட்டேன்
அது அவனுக்கு அவமாணமா போயிடுச்சாம்
பொது எடத்துல வைச்சு என்ன படுக்க கூப்பிட்டா
எனக்கு வராத அவமாணம் செருப்பு பிஞ்சுடும்னு நா சொன்னதுக்கு அவனுக்கு அவமாணமா போச்சாம்
கிடக்கறான் போ னு
விட்டேன் அக்கம் பக்கம் இருக்கற வளுக ஆளுக்கொன்னு பேச ஆரம்பிச்சாளுக
நா எதுக்கு யாரகண்டு பயப்படனும்
மாமன் இல்லாத நாளாபாத்து
அந்த மூனு மிருகமும் வீடு புகுந்து என்னை
சூறையாடியது
மாமன் சேதி கேட்டு மூர்க்க தனமா மூனு பேரையும் வெட்டி கொன்னுடுச்சு
ஏன்னா எம்மாமனுக்கு எம்மேல அம்புட்டு பிரியம்
நானும் நாண்டுக்கலாமுனுதா போனேன்
எம்மாமான் எங்கைய புடிச்சு புள்ள உம்மேல என்னடி
தப்பு இருக்கு நீ ஏன்டி சாகனும்னு
எனக்கு தைரியம் சொல்லி என் மனச மாத்திருச்சு
மாமனும் ஜெயிலுக்கு போயிடுச்சு
ஜாமீன்ல வந்து மறுபடி தண்டனையும் உறுதியாகிடுச்சு
இதெல்லாம்
கனவுகண்டதபோல நடந்து முடிஞ்சிருச்சு
மாமனுக்கு சாட்சிகள் சரியா இருந்ததால்
மூனு ஆயுள் தண்டனை விதிப்பு
42 வருசம் வெளியவே வர முடியாது
எம்மாமன் சொல்லும்
புள்ள நான் வெளிய வர ரொம்ப நாளாகும்
யாரையாச்சும் கல்யாணங்கட்டிகிட்டு
சந்தோசமா இரு புள்ள னு சொல்லும்
ஏன் மாமா இப்படி சொல்றனு
ஓ னு அழுதேன்
கொஞ்ச நாளைக்கப்புறம் என் மாமன் ஜெயிலுக்குள்ளயே செத்துபோச்சுனு
தகவல வந்து என் தலைல இடி விழுந்துச்சு
எல்லாத்தையும் முடிச்சுட்டு வைராக்கியத்தோட
வாழ ஆரம்பிச்சேன் ஆனா இந்த சமூகம்
எனக்கு வேப்பங்காயாக கசந்த்து
காரணம் எவன் பார்த்தாலுமே
புருசன் இல்லாத பொன்னுகளை
பார்க்குற பார்வையே வேற தானே
அன்பா உண்மையா தங்கச்சி னு உரிமை கொண்டு பேசுற
ஆண்களும் உண்டு
ஆனால் சமூகம் அவர்களுக்கு கொடுத்த பேர்
கையாலாகாதவன் அலிப்பையன் ஒம்போது
அப்படி பல பேரு என் வயசுக்கும் அந்த ஆசை இருக்காதா என்ன
எத்தனை நாளைக்குதான் என்னை நான் கட்டுபடுத்தி கொள்வது
குமார் என்ற பெயரில் ஒருத்தன் வந்தான் பழகினான்
பேசினான் எங்களது கண்கள் மட்டுமல்ல
உடல்களும் பேசிக்கொண்டது
பிடித்து போனது அவனுடைய அனல் மூச்சு ரொம்ப பிடித்துபோனது
வா எங்காவது வெளியில் சென்று பிழைத்து கொள்ளலாம் என்றான்
நம்பினேன்
யாரிடமும் சொல்லாமல் குழந்தையுடன் அவனோடு
கிளம்பிவிட்டேன் கல்கத்தாவுக்கு
பிறகுதான் தெரிந்தது அவன் வெட்டுபட்டு
செத்தவனின் பங்காளியாம் எனை பழிவாங்கத்தான்
கொண்டுவந்தானாம்
கல்கத்தாவுக்கு
என் கையிலிருந்த அனைத்தையும் பிடுங்கி கொண்டு
அந்த வீட்டு மாடியிலிருந்த புரோக்கர்
அதாங்க பொம்பள புரோக்கர்கிட்ட இரண்டு லட்சம் பணத்தை வாங்கிட்டு ஓடிப்போனான்
வேறு வழி சிறைபட்ட பறவையாய்
அடி உதைகளை வாங்கி தொழிலில் ஈடுபடுத்தபட்டேன்
இப்ப என் பெயர் தேவடியா
என் இரவுகளை என் வலிகளை சொல்லட்டா
முகம் தெரியாத மனிதர்கள் என் உடலங்களை
பிழிந்து நாசம் செய்தனர் என்னை கொஞ்சுபவன் ஒருவன்
என்னை முடியாத நேரத்திலும் மூர்கத்தனமாய் அடித்து
படுக்கவைத்தவன் இன்னொருவன்
ச்சே என்ன மனிதர்கள் இவர்கள் செத்துடலாம்னு
தோனும் ச்சே நாமளும் செத்துட்டா எங்குழந்தைய யார்வளர்ப்பா
அவள் நிலை என்ன ஆகும்னு மனச தேத்திகிட்டு விருப்பமில்லா வாழ்க்கை
குடிபோதையில் வருபவன் என்னை எப்படியெல்லாம் வளைப்பான் தெரியுமா
பொது இடங்களில் பொது அரங்கில் உடல் வளைக்கும் போட்டி வந்தால் என் போன்ற
விலைமாதுகள் தான் முதல் பரிசு வாங்குவார்
இந்த வாத்சயாயனார் என்கையில் கிடைத்தால்
கொலையே செய்திடுவேன் மனிதர்கள் நாகரிகம் பெறாதா காலத்தில் குகைகளில் மரங்களில் முட்புதர்களில்
காடுகளில் அந்த நேரத்துக்கு எப்படி உடல் இச்சையை தீர்க்க முடியுமோ
அப்படி தீர்த்து கொண்ட காட்சிகளை இவண் காமக்கலை என்று பெண்களை
எவ்வளவு சித்ரவதை செய்கின்றனர் இந்த ஆண்கள் உடலெங்கும் ரணம் நக்க்கீறல்கள்
ச்சே இனி ஒரு பிறப்பு இருக்குமானால்
பெண்ணாய் பிறக்ககூடாது
ஆண்டுகள். பல ஓடிப்போனது
படுத்து சேர்த்த பணத்தில் மகளை படிக்க வைத்துவிட்டேன்
மகள் தற்போது அமெரிக்காவில் பத்து ஆண்டுகள் ஓடிப்போனது அவளை நான் பார்த்து
அவள் படிக்கும் படிப்பு பால்வினை நோய்க்கான ஆராய்ச்சி படிப்பு
இந்தியா வர விரும்புகிறேன் என்றாள் என் மகள் வர வேண்டாம்என சொல்லிவிட்டேன்
இந்து இந்தியா எனும் நினைப்பே உனக்கு வரகூடாதென கண்டிப்பாய்
சொல்லிட்டேன்
தொற்றிகொண்டது எனக்கு அந்த நோய்
வைத்தியம் பார்த்தால் தீருமா தீராது
இந்த ஆணாதிக்க சமூகம்
என்றைக்கு பிறன் மனை நோக்கா பேராண்மையுடன்
வாழ்கிறதோ அப்போது
இந்த நோய் தானாகவே செத்துப்போகும்
மாங்கனிகளாய் இருந்த என் முலைகள்
இப்போது மொந்தை வாழை பழங்களாய் தொங்கிப்போனது
வென்னிற தோல்கள் சுருங்கி சொறிபுடித்து
உடல்எங்கும் கொப்புளங்கள் உடைந்து
உடைந்து நாற்றமெடுக்கும்
இதோ சாகப்போகிறேன்
இப்போது இந்த உடலுக்கு அலையும் ஆண்மகண்
யாரையும் காணவில்லை
என் உடல் எனக்கே நாறுகிறது
ச்சீ இதற்கா எம் மாமாகிட்ட வெட்டு பட்டு செத்தீங்க
இந்த உடலையா இரவு நேர சிவப்பு வெளிச்சங்களில்
புரட்டி எடுத்து
என்னை ரணப்படுத்தினீர்
எதோ பாலியல் கல்வியாமே
அதை பள்ளிப்படிப்பிலே சேர்த்து
சொல்லிக்கொடுத்தால்
இந்த குற்றங்கள் நடக்குமா
தேவை பாலியல் கல்வி
நானும் நீயும் சக மனுசி சக மனசன்
விருப்பம் என்பது அவரவர்
புரிதலை பொறுத்தது
என சொல்லி கொடுங்கள் வல்லுறவு வேண்டாம்
பிறன் மனை நோக்கா பேராண்மையுடன்
வாழந்து பழகுங்கள்
இப்ப சொல்லுங்கடா அழுக்குகளை உங்க கிட்ட
வைச்சுகிட்டு எனக்கெதற்கடா தேவடியா பட்டம் தறீங்க
இந்த நிலைக்கு நீங்களும் ஒரு காரணம் தானடா
தேவ மன்னிச்சுக்கோங்க உங்கள் பெற்ற தாயை நான் கொச்சைப்படுத்த விரும்பல
இனி யாரையும் தேவடியானு சொல்லாதீங்க
உண்மைல
அவளுக உத்தமிக தான்
அன்புடன் சிவா திவிக
வெட்கப்படுகிறேன்.
தேவடியா பேசறேன் என்ன அப்படி பாக்கறீங்க !
Reviewed by Admin
on
January 08, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.