Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 9, 2017

காஷ்மீரில் ஏர் இந்தியா விமானத்தின் டயர் வெடித்து விபத்து: 134 பயணிகள் ?


ஜம்மு-காஷ்மீர் விமான நிலையத்தில் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானத்தின் டயர் வெடித்து விபத்து ஏற்பட்டது. மேலும் விமானத்தில் பயணம் செய்த 134 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

ஏர் இந்தியா விமானம் ஒன்று இன்று காலை 11 மணியளவில் தலைநகர் டெல்லியில் இருந்து ஜம்மு-காஷ்மீர் சென்றது. ஜம்மு நகரில் மதியம் 12.5 மணியவில் தரையிறங்கிய போது திடீரென விமானத்தின் டயர் வெடித்தது.  இதனால் விமானத்தின் உள்ளே இருந்த பயணிகள் பதற்றம் அடைந்தனர்.

இருப்பினும் விமானத்தில் பயணம் செய்தவர்கள் அதிர்ஷ்டவசமாக  காயமின்றி உயிர் தப்பினர். மேலும் அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக உள்ளதாக ஏர் இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தால் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் விபத்தை தொடர்ந்து அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். பின்னர் அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.