Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 14, 2017

மீண்டும் சிஎஸ்கே: வந்துட்டேன்னு சொல்லு, திரும்ப வந்துட்டேன்னு சொல்லு !


சூதாட்ட புகாரில் சிக்கிய சென்னை சூப்புர் கிங்ஸ் அணிக்கு விதிக்கப்பட்டிருந்த இரண்டு ஆண்டுகள் தடை நேற்றுடன் முடிந்ததையடுத்து அந்த அணி மீண்டும் ஐபிஎல்-இல் களம் இறங்க உள்ளது.

கடந்த 2015-ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கௌரவ உறுப்பினர் என கூறப்படும் குருநாத் மெய்யப்பன் மற்றும் ராஜஸ்தான் அணியின் உரிமையாளர் ஆகியோர் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இதனையடுத்து இந்த இரண்டு அணிகளுக்கும் இரண்டு ஆண்டுகள் ஐபிஎல் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டது.

குறிப்பாக சென்னை அணி இல்லாததால் கடந்த இரண்டு ஐபிஎல் தொடர்களும் சுவாரஸ்யம் இல்லாமல் இருந்தது. இந்நிலையில் சென்னை அணிக்கு விதிக்கப்பட்டிருந்த இரண்டு ஆண்டுகள் தடை நேற்றுடன் முடிந்தது. இதனால் சென்னை அணி மீண்டும் களம் இறங்க உள்ளது.

இந்த சந்தோஷத்தை அந்த அணி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளிப்படுத்தியுள்ளது. வந்துட்டோம்னு சொல்லு, திரும்ப வந்துட்டோம்னு சொல்லு... விசில் போடு என தெரிவித்துள்ளனர்.

தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் போட்டிகளில் இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. மேலும் கலந்துகொண்ட அனைத்து ஐபிஎல் தொடரிலும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.