Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 17, 2017

யாருக்கு வாய்ப்புகள் அதிகம்: இரட்டைக் குழந்தைகள் பெற்றுக்கொள்ள ஆசையா ?


இரட்டைக் குழந்தை வேண்டுமென்று நினைப்பவர்கள், கர்ப்பமாக முயலும் போது ஃபோலிக் அமிலம் நிறைந்த உணவுகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.

* சர்க்கரைவள்ளிக் கிழங்கை தங்களது அன்றாட டயட்டில் சேர்க்கும் பகுதிகளில் வாழும் தம்பதிகளுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. எப்படியெனில் சர்க்கரைவள்ளிக் கிழங்கு, பெண்களின் கருவளத்தை அதிகரித்து, ஓவுலேசன் நிகழ்வை மேம்படுத்தி, இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் வாய்ப்பை அதிகரிக்கும்.

* இதுவரை இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்த பெண்களின் வயது 30-திற்கு மேல் தான் உள்ளது. இதற்கு காரணம் 30 வயதிற்கு மேல் பெண்கள் இறுதி மாதவிடாயை நெருங்கிக் கொண்டிருப்பால், ஒவ்வொரு மாதமும் கருப்பையில் இருந்து ஒன்றிற்கு மேற்பட்ட முதிர்ச்சியடைந்த கருமுட்டைகள் வெளியிடப்படுகின்றன. இந்நேரத்தில் உடலுறவில் ஈடுபடும் போது அக்கருமுட்டைகளில் விந்தணுக்கள் நுழைந்து இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுக்க உதவுகின்றன.

* இரட்டைக் குழந்தை வேண்டுமென்று நினைப்பவர்கள், கர்ப்பமாக முயலும் போது ஃபோலிக் அமிலம் நிறைந்த உணவுகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும். இந்த ஃபோலிக் அமிலம், பருப்பு வகைகள், நட்ஸ், பட்டாணி, அவகேடோ அல்லது வெண்ணெய் பழம், பசலைக்கீரை, வெண்டைக்காய், சிட்ரஸ் பழங்களில் அமிலம் இருக்கும்.

* உயரத்திற்கு ஏற்ற எடை சில ஆய்வாளர்கள், ஒரு பெண் தான் கருத்தரிக்கும் போது, தன் உயரத்திற்கு ஏற்ற எடையுடன் நன்கு ஆரோக்கியமாக இருந்தால், இரட்டைக் குழந்தைகள் பிறக்க அதிகம் வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர்.

* இரட்டைக் குழந்தை வேண்டுமென்று நினைக்கும் ஆண்கள், ஜிங்க் சத்து நிறைந்த உணவுப் பொருட்களான கடல் சிப்பி, பச்சை இலைக் காய்கறிள், விதைகள் மற்றும் பிரட் போன்றவற்றை அதிகம் உட்கொண்டால், விந்தணுக்களின் உற்பத்தி அதிகரித்து, பெண்களின் உடலினுள் செல்லும் போது, ஒன்றிற்கு மேற்பட்ட விந்தணுக்கள் நீந்தி கருமுட்டையை அடையும். இதனால் இரட்டைக் குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பும் அதிகரிக்கும்.

* ஒன்று அல்லது இரண்டு பிரசவத்தை சந்தித்த பெண்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. எனவே இரட்டை குழந்தை வேண்டுமென நினைக்கும் தம்பதிகள் முதல் குழந்தைக்கு பின் முயற்சியுங்கள்.

* முக்கியமாக தம்பதிகளின் குடும்பத்தில் யாருக்கேனும் இரட்டைக் குழந்தைகள் பிறந்திருந்து, அத்தம்பதிகள் இரட்டை குழந்தைக்கு முயற்சித்தால், அவர்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

* குட்டையான பெண்களை விட, உயரமான பெண்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்கும் வாய்ப்புள்ளது. அதுவும் 5 அடி 6 அங்குலம் கொண்ட பெண்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பு அதிகம்.

இரட்டைக் குழந்தை பிறக்க யாருக்கு வாய்ப்புகள் அதிகம் தெரியுமா?

இரட்டைக் குழந்தைகள் பிறப்பது நம் கையில் எதுவும் இல்லை. அது ஓர் இயற்கை நிகழ்வு. நிறைய பெண்களுக்கு இரட்டைக் குழந்தைகள் மீது ஆசை இருக்கும்.

எப்போது ஒரு பெண்ணின் கருப்பையில் இருவேறு விந்தணுக்கள் நுழைந்து இரண்டு கருமுட்டைகளை கருவுறச் செய்து வெளியேற்றுகிறதோ, அப்போது தான் இரட்டைக் குழந்தை உருவாகும். ஆனால் இரட்டைக் குழந்தைகள் பிறப்பது நம் கையில் எதுவும் இல்லை. அது ஓர் இயற்கை நிகழ்வு.

இங்கு யாருக்கெல்லாம் இரட்டைக் குழந்தைகள் பிறப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது என்று பார்க்கலாம்.

* கருவுறுதல் மருந்துகளை எடுத்து வரும் பெண்களுக்கு, இரட்டைக் குழந்தைகள் பிறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எப்படியெனில் இந்த மருந்துகளை பெண்கள் எடுக்கும் போது, ஒன்றிற்கு மேற்பட்ட கருமுட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வெளிவருவதால், இந்நேரம் உறவில் ஈடுபடும் போது விந்தணுக்கள் கருமுட்டைகளில் நுழைந்து இரட்டைக் குழந்தைகளுக்கான வாய்ப்பை அதிகரிக்கிறது.

* இரத்த சம்பந்தப்பட்ட உறவினர்கள் யாருக்கேனும் இரட்டைக் குழந்தைகள் பிறந்திருந்தால், அவர்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது.

* இதுவரை இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்த பெரும்பாலான பெண்கள் 35 வயதிற்கும் அதிகமானோர் தான். மேலும் ஆராய்ச்சி ஒன்றிலும் இளம் பெண்களை விட, வயது அதிகமான பெண்களுக்கே இரட்டைக் குழந்தைகள் பிறப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

* ஒரு பெண் செயற்கை முறை கருக்கட்டல் சிகிச்சையை மேற்கொண்டால், இரட்டைக் குழந்தையைப் பெற்றெடுக்கும் வாய்ப்புக்கள் அதிகம். எப்படியெனில் இம்முறையில் பெண்ணின் கருப்பையில் இருந்து வெளிவரும் கருமுட்டைகளை வெளியே எடுத்து, ஆய்வுக்கூடத்தில் ஆணின் விந்தணுக்களுடன் சேர்த்து கருவுறச் செய்து, பின் மீண்டும் அந்த கருமுட்டையை பெண்ணின் கருப்பையினுள் வைக்கும் போது, ஒன்றிற்கு மேற்பட்ட கருமுட்டைகள் கருவுற்று கருப்பையினுள் செலுத்துவதால் இரட்டைக் குழந்தைகள் பிறப்பதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கிறது. சில நேரங்களில் ஒரே ஒரு கருமுட்டை இரண்டாக பிளவுபட்டு இரட்டைக் குழந்தைகளாக உருவாகும்.

* உயரமான மற்றும் ஆரோக்கியமான பெண்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதாம். மேலும் ஆய்விலும் அது நிரூபிக்கப்பட்டுள்ளது. இதற்கு உயரமான பெண்களின் உடலில் வளர்ச்சிக்கு காரணியான இன்சுலின் அதிகம் இருப்பது தான் என்று கூறுகின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.