Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 10, 2017

பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு பரிசுத்தொகை அறிவிப்பு ; ஆசிய தடகளப் போட்டி !


ஆசிய தடகளப் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று பரிசுத்தொகையை அறிவித்தார்.

22 ஆவது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் ஒரிசா மாநிலத்தில் நடைபெற்றது . இதில் 45 நாடுகளை சேர்ந்த 655 வீரர்கள் பங்கேற்றனர். இந்தியாவின் சார்பில் மட்டும் 95 வீரர்கள் இந்த போட்டிகளில் பங்கேற்றனர். இந்த போட்டியில் இந்தியா 12 தங்கம் , 5 வெள்ளி , 12 வெண்கலம் என மொத்தம் 29 பதக்கங்களை பெற்று முதலிடம் பிடித்தது. இதில் 5000 மற்றும் 10000 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டியில் பங்கேற்ற தமிழகத்தை சேர்ந்த லட்சுமணன் தங்க பதக்கம் வென்று சாதனை படைத்தார். மற்றொரு தமிழக வீரரான ஆரோக்கிய ராஜீவ் வெள்ளி பதக்கம் வென்றார்.

இந்நிலையில் இன்று நடந்த தமிழக சட்டப்பேரவையில், ஆசிய தடகளப் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து தங்கம் வென்ற புதுக்கோட்டையை சேர்ந்த லட்சுமணனுக்கு ரூ.20 லட்சமும், வெள்ளிப் பதக்கம் வென்ற திருச்சியை சேர்ந்த ஆரோக்கிய ராஜீவ்வுக்கு ரூ.15 லட்சமும் பரிசுத்தொகையையாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.