July 24, 2017
இந்திய கிரிக்கெட் மகளிர் அணிக்கு விரைவில் பாராட்டு விழா!
மகளிர் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி வரை முன்னேறிய இந்திய அணிக்கு மிகப்பெரிய அளவில் பாராட்டு விழா நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.
இறுதிப் போட்டியில் இங்கிலாந்திடம் தோல்வியைத் தழுவினாலும், கடந்த 12 ஆண்டுகளில் முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி சாதித்த இந்திய மகளிர் அணி ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றது.
இந்த வரலாற்று நிகழ்வை சாத்தியப்படுத்திய மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய மகளிர் அணிக்கு சிறப்பான வரவேற்பு மற்றும் பாராட்டு விழாவை நடத்த பிசிசிஐ தயாராகி வருகிறது. இங்கிலாந்தில் இருந்து வரும் புதன்கிழமை தாயகம் திரும்பும் மகளிர் அணி வீராங்கனைகள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.50 லட்சம் மற்றும் நிர்வாகிகளுக்கு ரூ.25 லட்சம் பரிசளிக்கப்பட இருக்கிறது.
இந்திய வீராங்கனைகள் பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சிக்கும் பிசிசிஐ தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. பாராட்டு விழாவுக்கான தேதி மற்றும் இடம் ஆகியவை விரைவில் முடிவு செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் மகளிர் அணிக்கு விரைவில் பாராட்டு விழா!
Reviewed by Admin
on
July 24, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.