Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 13, 2017

வீட்டிலேயே தெரிந்துகொள்வது எப்படி: கருவில் வளரும் குழந்தை ஆணா? பெண்ணா?


பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது, வயிற்றில் வளர்வது ஆண் குழந்தையா? பெண் குழந்தையா? என தெரிந்து கொள்ள அதிக ஆர்வம் காட்டுவர். இதற்கு நம் முன்னோர்கள் சில அறிகுறிகளை கணித்து வைத்துள்ளனர்.

குழந்தையை நிர்யணிக்கும் கருப்பு கோடு:வயிற்றில் தொப்புள் வழியாக செங்குத்தாக கோடு தென்பட்டால், வயிற்றில் இருப்பது பெண் குழந்தை.ஆனால் அந்த கோடானது தொப்புளுக்கு கீழே மறைந்து காணப்பட்டால், வயிற்றில் இருப்பது ஆண் குழந்தை.

பெண்டுலம் ட்ரிக்:உங்கள் மோதிரத்தை உங்கள் முடியில் கட்டி, வயிற்றிற்கு மேலே தூக்கி காண்பிக்கும் போது, மோதிரமானது வட்டமாக சுற்றினால், வயிற்றில் வளர்வது ஆண், அதுவே பக்கவாட்டில் ஆடினால் பெண் என்று அர்த்தம்.

எடை ஜாஸ்தியா இருக்கா?சுமக்கும் குழந்தையின் எடை வயிற்றின் முன்பக்கம் அளவுக்கு அதிகமாக இருந்தால், அது ஆண் குழந்தை என்று அர்த்தம். குழந்தையானது வெயிட் இல்லாதது போல் இருந்தால், வயிற்றில் பெண் குழந்தை என்று அர்த்தம்.

புளிப்பா? இனிப்பா?உங்களுக்கு புளிப்பான உணவின் மீது நாட்டம் அதிகம் இருந்தால், அது ஆண் குழந்தையை சுமக்கிறீர்கள் என்று அர்த்தம். அதுவே இனிப்பு அதிகம் சாப்பிட தோன்றினால், வயிற்றில் பெண் குழந்தை வளர்கிறது.

சிவப்பு முட்டைக்கோஸ் சோதனை:சிவப்பு முட்டைக்கோஸ் வாங்கி, அதனை பொடியாக நறுக்கி, கொதிக்கும் நீரில் போட்டு 10 நிமிடம் கொதிக்க விட்டு, அடுப்பில் இருந்து இறக்கிக் கொள்ள வேண்டும். பின் காலையில் முதன் முதலில் வெளியேற்றிய சிறுநீரை, அதற்கு சரிசமமாக ஊற்ற வேண்டும். அப்படி ஊற்றிய பின், அதன் நிறமானது பிங்க் அல்லுது சிவப்பு நிறத்தில் மாறினால், ஆண் குழந்தை என்று அர்த்தம். அதுவே ஊதா நிறத்தில் மாறினால் பெண் குழந்தை என்று அர்த்தம்.

பேக்கிங் சோடா சோதனை:காலையில் வெளியேற்றிய சிறுநீரை ஒரு கப்பிலும், மற்றொரு கப்பில் பேக்கிங் சோடாவையும் வைத்துக் கொள்ளவும். பின் சிறுநீரை பேக்கிங் சோடாவில் ஊற்றும் போது, நுரை போன்று பொங்கினால், ஆண் குழந்தை என்று அர்த்தம். அதுவே எந்த ஒரு வினைபுரியாமல் இருந்தால், பெண் குழந்தை என்று அர்த்தம்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.