Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 17, 2017

செனகல் நாட்டில் கால்பந்து போட்டியின்போது மோதல்: 8 பேர் பலி


செனகல் நாட்டில் கால்பந்து போட்டியின்போது, ரசிகர்களின் கலவரத்தால் மைதானத்தின் சுவர் இடிந்து விழுந்து 8 பேர் பலியாகினர். மேலும் பலர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள செனகல் நாட்டின் டாக்கர் நகரில் கால்பந்து மைதானம் அமைந்துள்ளது. இங்கு நேற்று இரண்டு உள்ளூர் அணிகள் விளையாடிக் கொண்டிருந்தன. இந்த போட்டியை காண மைதானம் முழுவதும் ரசிகர்கள் திரண்டிருந்தனர். போட்டி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தபோது, ஒரு அணியை சேர்ந்த ரசிகர்கள், மற்றொரு அணியை சேர்ந்த ரசிகர்கள் மீது கற்கள் மற்றும் பாட்டில்களை வீசி ரகளையில் ஈடுபட்டனர். இதைதொடர்ந்து அவர்களும் பதிலுக்கு தாக்கத் தொடங்கினர். இதனால் மைதானத்தில் திடீரென கலவரம் ஏற்பட்டது.

தகவலறிந்து, மைதானத்துக்கு விரைந்து வந்த போலீசார், ரசிகர்களை கட்டுப்படுத்த கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதனால் ரசிகர்கள் அலறியடித்து ஓடினர். இதற்கிடையே, மைதானத்தின் காம்பவுண்ட் சுவரின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. அதன் இடிபாடுகளில் சிக்கி 8 ரசிகர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.