Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 20, 2017

இந்திய கிரிக்கெட் அணியின் “கட்டப்பா” ஆனார் ஜடேஜா..,


மினி உலககோப்பை என்று அழைக்கப்படும் ICC சாம்பியன்ஸ் கோப்பை(2017) போட்டியை இந்த முறை இங்கிலாந்து நடத்தியது. அதன் இறுதிப்போட்டி நேற்று லண்டன் ஓவல் மைதானத்தில் இந்திய – பாகிஸ்தான் இடையே நடைபெற்றது.
இந்த போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியிடம் 180 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது இருந்தது.
நேற்றைய போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரோகித், கோலி, யுவராஜ், டோனி என அனைவரும் அடுத்தடுத்து நடையை கட்டி ஏமாற்றம் அளித்தனர். ஆனால் 22 வயதே ஆன இளம் ஆட்டக்காரர் பாண்டியா மட்டும் அதிரடி காட்டி பொறுப்புடன் விளையாடினர்.
ஒரு கட்டத்தில் பாண்டியா தனி மனிதனாக நின்று பாகுபலியை போல ஆட்டத்தின் போக்கை மற்ற முயற்சித்தார். அவர் 76 ரன்னுடன், ஜடேஜா உடன் ஆடிக்கொண்டிருந்த போது பாண்டியா ரன் அவுட் ஆனார்.
இது இந்திய கிரிக்கெட் ரசிகர்களை கோபத்தின் உச்சத்திற்கே கொண்டு சென்றது. அந்த கோபத்தில் ஜடேஜாவை “பாகுபலியை(பாண்டியா) கொன்ற கட்டப்பா” என விமர்சனங்களால் வறுத்து தள்ளினர்.
பாகுபலி படத்தில் கட்டப்பா கதாபாத்திரம் முதுகில் குத்துவது போன்று இயக்குனர் வடிவமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த காட்சியை வைத்து குறும்புக்கார நெட்டிசன்கள் தங்கள் பாணியில் விமர்சித்து இருந்தனர். இது கிரிக்கெட் ரசிகர்களை கொஞ்சம் சிரித்து ஆறுதல் அடைய செய்துள்ளது.
வெற்றியோ! தோல்வியோ! கிரிக்கெட் ரசிகர்கள் பொழுது போக்குக்கு மட்டும் குறைவே இல்லை.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.