Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 20, 2017

இந்தியாவின் தோல்வியைத் தாங்க முடியாமல் கிரிக்கெட் ரசிகர் இரயில் முன் பாய்ந்து தற்கொலை


பாகிஸ்தான் உடனான ஆட்டத்தில் இந்தியக் கிரிக்கெட் அணி தோல்வி அடைந்ததைத் தாங்க முடியாமல், வங்கதேசத்தில் உள்ள இந்திய கிரிக்கெட் ரசிகர் ஒருவர் இரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் 180 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி கோப்பையைக் கைப்பெற்றியது.
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி கோப்பையை வெல்வது இதுவே முதல் முறை.
பாகிஸ்தான் தரப்பில் முகமது ஆமிர், ஹசன் அலி ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
ஃபகார் ஸமான் ஆட்டநாயகனாகவும், ஹசன் அலி தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் இந்தப் போட்டியில் இந்தியா தோற்றதைத் தாங்க முடியாமல், வங்கதேசத்தின் ஜமல்பூரில் உள்ள 25 வயது இந்திய கிரிக்கெட் ரசிகரான பித்யுத், நேற்றிரவு இரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்தத் தகவலை வங்கதேச காவல்துறையும் உறுதி செய்து அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.