Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 5, 2017

'கிச்' என்று ஜெயித்த இந்தியா.. டென்ஷனில் டிவி பெட்டிகளை அடித்து நொறுக்கிய பாகிஸ்தானியர்!


இஸ்லாமாபாத்: கிரிக்கெட்டை வைத்துத்தான் இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் தேசபக்தியை ஓவராக வெளிப்படுத்துகிறார்கள். ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்றதால் அந்த நாட்டில் பெரும் பிரளயமே வெடித்துள்ளது.
கிரிக்கெட்டில் இரு நாடுகளும் மோதும் போது யார் வென்றாலும் சரி, தோற்றாலும் சரி தேசபக்தியோடு இணைத்து ஓவராக ரியாக்ட் செய்கின்றனர்.
மினி உலகக் கோப்பையான ஐசிசி டிராபி கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்றது. பாகிஸ்தானும் இந்தியாவும் நேற்று மோதின. பாகிஸ்தானை இந்திய அணி 124 ரன்களில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இந்திய அணி வீரர்கள் முதல் 2 ஓவரில் சுமாராக விளையாடினாலும் பின்னர் சுதாரித்தனர். அடுத்தடுத்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஹர்திக் பாண்டியா, பலே பாண்டியாவாக மாறி ஹாட்ரிக் சிக்ஸ்களை பறக்கவிட்டு கடைசி நேரத்தை ஸ்கோரை கிச் என்று உயர்த்தினார். 48 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 319 ரன்கள் குவித்தது.

பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணி வீரர்கள் தொடக்கம் முதலே மந்தமாக விளையாடி வந்தனர். மழையும் இந்தியாவிற்கு சாதகமாகவே இருந்தது. அனைத்து விக்கெட்டுகளையும் சீரான இடைவெளியில் பறிகொடுத்தது பாகிஸ்தான்.

164 ரன்களே எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது பாகிஸ்தான். இதையடுத்து டக்-ஒர்த் லெவிஸ் முறைப்படி இந்திய அணி 124 ரன்களில் வென்றது.

இந்த வெற்றியை இந்திய ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். நள்ளிரவு நேரத்திலும் இந்தியாவின் முக்கிய நகரங்களில் வெடிச்சத்தம் விண்ணை பிளந்தது.

பாகிஸ்தானில் முக்கிய நகரங்களில் பல இடங்களில் கும்பலாக கூடி போட்டியை ரசித்துப் பார்த்த ரசிகர்கள் பாகிஸ்தான் தோற்றுப் போனதால் கோபமடைந்து டிவி பெட்டிகளை அடித்து நொறுக்கினர். இதனால் அங்கேயும் பல பகுதிகளில் டிவிகள் உடைபடும் சத்தம் கேட்டது.
ஒரு வீட்டில் டிவி பார்த்துக்கொண்டிருந்தவர்கள், பாகிஸ்தானை இந்தியா வென்ற உடன் கோபத்தில் பித்தளை சொம்பை வைத்து ஓங்கி அடித்து டிவியை உடைத்தார். ஆத்திரம் தீராமல் சில்லு சில்லாக நொறுக்கினார். கிரிக்கெட் வீரர்களுக்கு எதிராக அந்த நாட்டு ரசிகர்கள் கொந்தளிப்புடன் உள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.