May 11, 2017
ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்: இந்திய வீரர் ஹர்பிரீத் சிங் வெண்கலம் வென்றார்
ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய வீரர் ஹர்பிரீத் சிங் வெண்கலப் பதக்கம் வென்றார். மற்றொரு வீரர் குர்பிரீத் சிங் பதக்க வாய்ப்பை தவறவிட்டார்.
ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய வீரர் ஹர்பிரீத் சிங் வெண்கலப் பதக்கம் வென்றார். மற்றொரு வீரர் குர்பிரீத் சிங் பதக்க வாய்ப்பை தவறவிட்டார்.
ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. 14-ம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் ஈரான், உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், ஜப்பான், கொரியா, சீனா உள்பட பல்வேறு நாடுகள் கலந்து கொள்கின்றன. இந்தியா சார்பில் 24 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.
இன்று கிரேக்கோ ரோமன் பிரிவில் இந்திய வீரர்கள் குர்பிரீத் சிங், ஹர்பிரீத் சிங் ஆகியோர் தங்கள் எடைப்பிரிவுகளில் பெண்கலப் பதக்கத்துக்கான போட்டிக்கு முனனேறினர்.
75 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற குர்பிரீத் சிங், ரெப்பேஜ் சுற்றில் கிர்கிஸ்தானின் பர்கோ பெய்ஷாலீவை தோற்கடித்தார். 80 கிலோ எடைப்பிரிவில் ஹர்பிரீத் சிங், கொரியாவின் ஜூன்-ஹூயங் கிம்மை வீழ்த்தினார்
அதன்பின்னர் நடைபெற்ற வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் குர்பிரீத் சிங், சீனாவின் பின் யாங்கை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில், குர்பிரீத் சிங் 0-8 என்ற கணக்கில் படுதோல்வியடைந்தார்.
அதன்பின்னர் 80 கிலோ எடைப்பிரிவில் ஹர்பிரீத் சிங், சீனாவின் நா ஜன்ஜியுடன் மோதினார். இப்போட்டியில் 3-2 என்ற புள்ளிக் கணக்கில் ஹர்பிரீத் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார். இந்திய அணி வெல்லும் முதல் பதக்கம் இதுவாகும்.
ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்: இந்திய வீரர் ஹர்பிரீத் சிங் வெண்கலம் வென்றார்
Reviewed by மறத்தமிழன்
on
May 11, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.