Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 13, 2017

இன்றைய கடைசி ஆட்டத்தோடு கலைக்கப்படுகிறது குஜராத் லயன்ஸ் அணி.. உருக்கமான ரெய்னா


குஜராத் லயன்ஸ் அணிக்காக, கடைசி லீக் ஆட்டத்தில் ஆடுவதற்கு முன்பாக அந்த அணி கேப்டன் சுரேஷ் ரெய்னா வீடியோ மெசேஜ் ஒன்றை வெளியிட்டு அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் ஐபிஎல் தொடரில் பங்கேற்க முடுியவில்லை. சூதாட்ட புகார் காரணமாக இவ்விரு வருடங்களும் அந்த அணி ஆட தடை விதிக்கப்பட்டது. எனவே, இந்த காலகட்டத்தில், புனே மற்றும் குஜராத் அணிகள் அறிமுகம் செய்யப்பட்டன.

புனே அணியில் டோணி, அஸ்வின் உள்ளிட்ட சிஎஸ்கே வீரர்களும், குஜராத் அணியில் ரெய்னா, ஜடேஜா போன்ற சிஎஸ்கே வீரர்களும் ஆடினர். இவ்வாறாக பல அணிகளும் அவர்களை ஏலம் எடுத்திருந்தன.
அடுத்த வருடம் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மீண்டும் ஆட வர உள்ளன. இந்த ஆண்டு சீசனில் குஜராத் லயன்ஸ் இன்று தனது கடைசி லீக் ஆட்டத்தை, ஹைதராபாத் அணிக்கு எதிராக ஆடியது. பிளே ஆப் சுற்றுக்கு குஜராத் தகுதி பெறவில்லை என்பதால், அந்த அணிக்கு இது இவ்வாண்டின் கடைசி போட்டியாகும்.

எனவே அனைத்து தரப்புக்கும் உருக்கமாக நன்றி தெரிவித்து ரெய்னா வீடியோ மெசேஜ் வெளியிட்டுள்ளார். அடுத்த ஐபிஎல் சீசனில் எந்த அணிக்காக ஆடினாலும், தனக்கான ஆதரவை தருமாறு ரசிகர்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.