Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 30, 2017

சாம்பியன்ஸ் டிராபி: வங்கதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் 240 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய வெற்றி


ஓவல்: வங்கதேச அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் இந்திய அணி, 240 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் கிரிக்கெட் தொடர் நாளை மறுநாள் தொடங்குகிறது. இதையொட்டி நடைபெற்ற யிற்சி ஆட்டத்தில் இந்தியா, வங்காள தேசத்தை இன்று எதிர்கொண்டது.

டாஸ் வென்ற வங்காள தேசம் முதலில் பீல்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 324 ரன்கள் குவித்தது.

அதிகபட்சமாக தவான் (60), தினேஷ் கார்த்திக் (94), ஹர்திக் பாண்டியா (80) மற்றும் ஜடேஜா (32) ரன்கள் சேர்த்தனர். விராட் கோஹ்லி மற்றும் டோணி ஆகியோர் பேட்டிங் செய்யவில்லை.

கடின இலக்கை துரத்திய வங்கதேச அணி, துவக்கம் முதலே இந்திய அணி பந்துவீச்சை சமாளிக்க தடுமாறியது. அந்த அணியின் முஷ்பிகுர் (13), ஷாகிப் அல் ஹசன் (7), மெஹ்முதுல்லா (0), மொசாடெக் ஹொசைன் (0), மெஹெதி ஹசன் மிராஸ் (24), சன்சாமுல் இஸ்லாம் (18), ருபெல் ஹொசனை் (0) ரன்னிலும் அடுத்தடுத்து வெளியேறினர்.
இதனால் 23.5 ஓவரிலேயே 84 ரன்னில் ஆல்அவுட் ஆகி படுதோல்வி அடைந்தது. எனவே இந்தியா 240 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ் ஆகியோர் தலா 3 விக்கெட் சாய்த்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.