Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 27, 2017

தந்தி அனுப்புவதற்கான சங்கேத மொழியை உருவாக்கிய சாமுவேல் எஃப்.பி. மோர்ஸ்


1844ஆம் ஆண்டு மே மாதம் 24ஆம் நாள் முதல் தந்தியை, சாமுவேல் எஃப்.பி. மோர்ஸ் அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யிலிருந்து பால்டிமோருக்கு சோதனை முறையில் அனுப்பினார். இவர்தான் தந்தி அனுப்புவதற்கான சங்கேத மொழியை உருவாக்கியவர். அதனால்தான் அந்த மொழிக்கே மோர்ஸ் கோட் (MORSE CODE) என்று பெயர்.

ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு குறியீடு இருக்கும். அந்தக் குறியீட்டை மோர்ஸ் பலகையில் (morse key) அழுத்தி மறுமுனைக்குப் புரிய வைப்பார்கள். அதனை அங்குள்ளவர் புரிந்துகொண்டு செய்தியை எழுதிக்கொள்வார். அந்தச் செய்தி ஒரு தாளில் எழுதப்பட்டு சம்பந்தப்பட்டவருக்குக் கொடுக்கப்படும். இதற்கெனப் பயிற்சி பெற்றவர்களே தந்தி அலுவலகத்தில் பணியில் அமர்த்தப்படுவார்கள். மோர்ஸ் பலகை இயந்திரத்தில் கட்..கடா..கட்... என்று எழுப்பப்படும் ஓசையிலேயே செய்திகள் புரிந்து கொள்ளப்படும்.

தொலைப்பேசியை கிரஹாம் பெல் கண்டுபிடிப்பதற்கு முன்பு வரை தந்தி சாதனம்தான் உலகின் தகவல் தொடர்புக் கருவியாக இருந்தது. அதாவது, புறாக்களின் கால்களில் தகவல்களைப் பரிமாறிக் கொண்டிருந்த காலத்திற்கு அடுத்தபடியாக, தகவல் அனுப்பும் முதல் அறிவியல் சாதனம் தந்தி அனுப்பும் கருவிதான்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.