Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 15, 2017

சுருட்டை முடி பராமரிப்பு எப்படி?


சுருட்டை முடி உடையவர்கள் சுந்தர அழகு மிக்க பாக்கியசாலிகள். அதை சிலர் இயற்கையாக பிறப்பிலேயே பெறுகின்றனர். இன்னும் சில சுருட்டை முடியை  பெருவதற்கு பியூட்டி பார்லர் சென்று, இதை போன்று தற்காலிகமாகவோ அல்லது நிரந்திரமாகவோ செய்து கொள்ளும் வசதி வந்துவிட்டது. இந்த  முடியை கொண்டு நாம் எந்த வகை அலங்காரத்தையும் செய்ய முடியும். ஆனால் இத்தகைய தலை முடியை வாருவது சிறிது கடினம் தான்.

அதுமட்டுமல்லாமல் அதை சுத்தமாகவும் சிக்கல் இல்லாமலும் பராமரிப்பது மேலும் கடினமான விஷயமாகும்.

இத்தகைய முடியை உடைய பெண்கள், இதை எப்படி முறையாக பராமரிக்க முடியும் என்று தெரிந்து கொள்ள ஆசைபடுவீர்கள். சுருட்டை முடி நேராக  இருக்கும் முடியை காட்டிலும் பராமரிப்பில் அதிகம் கடினமாக இருக்கும். ஆகையால் இதை எப்படி பாதுகாப்பு என்று குறிப்புகளை தற்போது  பார்ப்போம். இந்த குறிப்புகள் தங்கள் முடியை அழகாகவும், அடர்த்தி குறையாமலும் இருக்க உதவும். சுருட்டை முடியை பராமரிக்க உதவும் பொருட்கள்  கடைகளில் அதிகளவில் கிடைக்கின்றன. இதை வாங்கி பயன்படுத்தலாம். ஆனால் வீட்டில் உள்ள பொருட்கள் கொண்டு முடியை மேம்படுத்துவது  மிகவும் பாதுகாப்பானதாகும்.

கண்டிஷனர் : படர்ந்து விரியும் கூந்தலை கட்டுப்படுத்துவது கடினம் தான். ஆகையால் கண்டிஷனரால் இதை சிறிதளாவு கட்டுப்படுத்த முடியும். குளித்த பின் இதை  போட்டால் சிறந்ததாகும். கடைகளில் கிடைக்கும் கண்டிஷனர் அல்லது வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு இதை செய்யலாம். தேன், முட்டை, ஆப்பிள், சீடர் வினிகர் மற்றும் டீ ஆகிய பொருட்களை கொண்டு இதனை செய்ய முடியும்.

சுருள் முடியை சீவுதல் : சுருட்டை முடியை கொண்ட நீங்கள் பெரிய பற்கள் உடைய சீப்பை தேர்ந்தெடுத்து பயன்படுத்தவும். இவை முடியின் சிக்கல்களை எளிதாக அகற்ற  உதவும். முடி உடைவதையும் தடுக்கும். இதனால் முடி கூடிய வரை பாதுகாப்பாக இருக்கும்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.