Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 16, 2017

கத்தார் மீது அமெரிக்க நிறுவனம் குற்றச்சாட்டு !


தீவிரவாதிகள், தீவிரவாத அமைப்புகளுக்கு கத்தார் அரசு உதவி வருவதாக  அமெரிக்க நிறுவனம் ஒன்று குற்றம் சாட்டியுள்ளது. அமெரிக்காவில் தீவிரவாத எதிர்ப்பு திட்டம் - சிஈபி என்ற நிறுவனம் இயங்கிவருகிறது.

இந்நிறுவனம் தீவிரவாத அமைப்புகளுக்கு கிடைத்துவரும் நிதியுதவி குறித்து ஆய்வு அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், கத்தார் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் தீவிரவாதிகள், தீவிரவாத் அமைப்புகளாக அறிவிக்கப்பட்டுள்ள ஹமாஸ், தலிபான், ஐஎஸ் அமைப்புகளுக்கு கத்தார் உதவி வருகிறது. நேரடியாகவோ மறைமுகமாகவோ இந்த அமைப்புகள் கத்தாரிடம் இருந்து உதவி பெறுகின்றன. இவ்விஷயம் குறித்து அமெரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அமெரிக்காவில் இயங்கிவரும் வங்கிகள், விமான நிறுவனங்களும் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும். கத்தாருடன் கொண்டுள்ள உறவை மறுபரிசீலனை செய்யவேண்டும். இவ்வாறு சிஈபி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.