Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 20, 2017

வீட்டு உபயோபப் பொருட்களில் உள்ள மருத்துவ குணங்களை பற்றி அறிவோம்!


வெந்தயம்: உடலின் வெப்பநிலையை சமன்செய்யும். கண் எரிச்சலைப் போக்கி குளிர்ச்சியை அளிக்கும். சர்க்கரை நோயாளிகள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர, சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும். மாதவிடாய் காலங்களில் வயிற்றுவலியைச் சமாளிக்க நீர் மோருடன் சிறிதளவு வெந்தயத்தைக் கலந்து குடிக்கலாம்.

கறிவேப்பிலை: சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிட்டு வருவது நல்லது. இரும்புசத்துக் குறைப்பாடு, பார்வைக் குறைபாடு, முடி  உதிர்தல் ஆகியவற்றை தீர்க்கும்.

கொத்தமல்லி: செரிமானத்தை அதிகரிக்கும். கல்லீரலைச் சுத்தப்படுத்தும்.

இஞ்சி: பித்தக்குறைபாடு, சளி மற்றும் காய்ச்சலுக்கு உகந்தது. வயிற்று உபாதைகளைத் தீர்க்கும்.

பூண்டு: கெட்ட கொழுப்பைக் குறைக்கும். வாயுத் தொல்லைகள் உருவாகாமல் தடுக்கும். அன்றாடம் அளவுடன் சாப்பிட்டு வர  புற்றுநோய்கள் வராமல் தடுக்கும்.

மிளகு: மிகச்சிறந்த மருத்துவ தன்மை கொண்டது. விஷத்தை முறிக்கும். தேனுடன் மிளகுப் பொடியைச் சேர்த்து சாப்பிட்டால்,  சளித் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

சோம்பு: வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை நீக்கும். வாந்தியை நிறுத்தும். வாய் துர்நாற்றத்தைப் போக்கும். மணமூட்டியாகச் செயல்படுவதுடன் செரிமான சக்தியையும் மேம்படுத்தும்.

சீரகம்: உள் உறுப்புகளைச் சீர்செய்வதால் சீரகம் என்று பெயர் பெற்றது. வயிற்றுப் புண் மற்றும் தலைசுற்றலைச் சரிசெய்யும்.  இரத்த அழுத்தத்தைச் சீராக்கும். இரத்தத்தை சுத்திகரிக்கும்.

மஞ்சள்: மஞ்சளில் உள்ள குர்குமின், இதய நோய்கள் உயர் இரத்த அழுத்தம் ஆகியவற்றுக்கு நல்லது. சிலவகைப்  புற்றுநோய்களைத் தீர்க்கும் சக்தி மஞ்சளுக்கு உண்டு.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.