July 30, 2017
காவல் ஆய்வாளர் உட்பட 2 பேர் கைது: வரதட்சணை கொடுமையால் மருத்துவர் மனைவி கொலை வழக்கு !
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே வரதட்சணை கொடுமையால் மருத்துவரின் மனைவி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு காவல் ஆய்வாளர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்த மருத்துவர் இளஞ்சேரனின் மனைவி திவ்யா கடந்த 17 ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இதையடுத்து நடத்தப்பட முதற்கட்ட விசாரணையில் திவ்யா வரதட்சணை கொடுமையால் அடித்துக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து, திவ்யாவின் கணவர் டாக்டர் இளஞ்சேரன், மாமனார் முத்தழகன், மாமியார் ராணி ஆகியோர் மீது கொலை வழக்குப் பதிவு செய்த காவலர்கள் அவர்களை கைது செய்து சிறையில் அடித்தனர்.
இந்த நிலையில் திவ்யா கொலை வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகித்த காவலர்கள் , திருச்சி சிறையில் இருந்த திவ்யாவின் கணவர் டாக்டர் இளஞ்சேரன், மாமனார் முத்தழகன், மாமியார் ராணி ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்து மூன்று பேரையும் மன்னார்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
ஆனால் நீதிபதி மூன்று பேரையும் 2 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதித்து உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து அவர்களிடம் நடைபெற்ற விசாரணையில், திவ்யா கொலையில் மாமியார் ராணியின் அண்ணனும், திருவாரூர் உணவு கடத்தல் தடுப்புப் பிரிவில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணிபுரியும் சிவக்குமார் என்பவருக்கும், கரூரைச் சேர்ந்த செந்தில் என்பவருக்கும் தொடர்பு இருப்பதை தெரிய வந்தது.
கொலை நடைபெற்ற அன்று திவ்யா வீட்டில் தனியாக இருக்கும் போது அங்கு சென்ற ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் கரூரை சேர்ந்த செந்தில்குமார் , முத்தழகன் ஆகியோர் திவ்யாவை கொடூரமாக அடித்து கொலை செய்துள்ளனர்.
திவ்யாவை கொலை செய்துவிட்டு இளஞ்சேரனுக்கு கூடுதல் வரதட்சணையுடன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து வைக்க அவர்கள் திட்டமிட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாள் விசாரணை முடிவடைந்த நிலையில் மூன்று பேரும் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் கொலை செய்ததாக கூறப்படும் உணவு கடத்தல் தடுப்புப் பிரிவில் சிறப்பு சார்பு ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் கரூர் செந்தில்குமார் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவல் ஆய்வாளர் உட்பட 2 பேர் கைது: வரதட்சணை கொடுமையால் மருத்துவர் மனைவி கொலை வழக்கு !
Reviewed by Admin
on
July 30, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.