Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 4, 2017

நெல்லை அருகே பலாத்கார முயற்சி ஆசிட் வீசப்பட்ட இளம்பெண் சாவு: ஆட்டோ டிரைவர் மீது கொலை வழக்குப்பதிவு


பலாத்கார முயற்சியில் ஆசிட் வீசப்பட்ட இளம்பெண், சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுதொடர்பாக ஆட்டோ டிரைவர் மீது கொலை  வழக்குப்பதியப்பட்டுள்ளது. நெல்லை வண்ணார்பேட்டையைச் சேர்ந்தவர் மூக்காண்டி என்ற முருகேஷ். இவர், டயர் கம்பெனியில் வேலை பார்த்து  வந்தார். இவரது மனைவி ராமலட்சுமி(28), நெல்லையில் செல்போன் கடையில் வேலை பார்த்தார். இந்நிலையில் சீவலப்பேரியைச் சேர்ந்த ஆட்டோ  டிரைவர் சின்னத்துரை என்ற சின்னராஜ்(28) என்பவர் ராமலட்சுமி வீட்டினருகே உள்ள தனது அக்காள் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றார். அப்போது  அவருக்கும், ராமலட்சுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது.

கடந்த 7.11.2016ல் களக்காடு அருகே சிங்கிகுளத்தில் உள்ள கோயிலுக்கு ராமலட்சுமியை ஆட்டோவில் சின்னத்துரை அழைத்துச் சென்றார். அங்கு  காட்டுப்பகுதியில் வைத்து அவரை பலாத்காரம் செய்ய முயன்றார். அதற்கு ராமலட்சுமி சம்மதிக்காததால் ஆத்திரமடைந்த சின்னத்துரை தான்  வைத்திருந்த ஆசிட்டை எடுத்து ராமலட்சுமி மீது ஊற்றினார். இதில் அவரது இரு கண்களும் பாதிக்கப்பட்டதோடு, உடலிலும் காயம் ஏற்பட்டது.  ராமலட்சுமி நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். களக்காடு போலீசார் விசாரித்து  சின்னத்துரை மீது கடத்தல், பலாத்கார முயற்சி, ஆசிட் வீச்சு உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு  செய்து கைது செய்தனர். தற்போது அவர் ஜாமீனில்  வெளிவந்த நிலையில், ராமலட்சுமி நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து இந்த வழக்கு கொலை வழக்காக  மாற்றப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.