Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 16, 2017

ஆசிரியரை கண்டம் துண்டமாக வெட்டியது ஏன்? வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்


வேலூர் மாவட்டத்தை சேர்ந்த லெட்சுமணன் என்பவரை அண்ணாமலை என்பவர் கண்டம் துண்டாக வெட்டி கொலை செய்துள்ளார்.

ஆசிரியராக பணியாற்றும் லெட்சுமணனுக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ள நிலையில், பல பெண்களுடன் தொடர்பில் இருந்துள்ளார்.

இந்நிலையில்தான் லெட்சுமணன் மர்மநபரால் கொலை செய்யப்பட்டார், இதுதொடர்பாக தீபக் மற்றும் வனிதா தம்பதியினரை பொலிசார் கைது செய்து விசாரித்ததில், வனிதாவின் கள்ளக்காதலன் அண்ணாமலைதான் இந்த செயலில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து அண்ணாமலை அளித்துள்ள வாக்குமூலத்தில், லெட்சுமணனுக்கு கவிதா மற்றும் வனிதா ஆகிய இரு பெண்களுடன் கள்ளத்தொடர்பு இருந்தது. இதில் பேருந்தில் வைத்து வனிதாவுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது.

நாங்கள் இருவரும் தொலைபேசி எண்களை பகிர்ந்துகொண்டோம், இதற்கிடையில் வனிதா மீண்டும் லெட்சுமணனுடன் நெருங்கி பழக ஆரபித்தார், இதனை விட்டுவிடுமாறு பலமுறை கூறியும் அவர் மறுத்துவிட்டார்.

மேலும் வனிதாவை, லெட்சுமணன் தனது பைக்கில் தினமும் அழைத்துச்சென்று வீட்டில் விட்டு வருவதும் தெரிந்தது.

கடந்த 12 ஆம் திகதி வனிதா வீட்டிற்கு திரும்பும் வழியில் மது அருந்திவிட்டு போதையில் காத்திருந்தேன்.

அப்போது வனிதாவை லெட்சுமணன் வழக்கம்போல் பைக்கில் அழைத்து வந்து தாயலூர் அடுத்த புத்தூர் அருகே மறைவான இடத்திற்கு சென்று உல்லாசமாக இருந்தனர்.

இதைப்பார்த்த நான் அரிவாளால் லெட்சுமணனை சரமாரியாக வெட்டியதில் அவர் அதே இடத்தில் இறந்தார், வனிதா அங்கிருந்து தப்பியோடினார் என்று பொலிசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.