Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 1, 2017

ஆண் மயில் செக்ஸ் வச்சிக்காதா.. அறிவியல் வாத்தியார் உயிரோட இருக்காரா? நெட்டிசன்கள் பொளேர்


ஆண் மயில் பெண் மயிலுடன் உறவு கொள்ளாது. அதனால்தான் அது தேசிய பறவையாக உள்ளது என்று சொல்லி ராஜஸ்தான் நீதிபதி நெட்சன்களிடம் மாட்டிக் கொண்டார்.

ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதி மகேஷ் சந்திர சர்மா, "ஆண் மயில் பிரம்மச்சர்யத்தை பின்பற்றும் பறவை. அது ஒருபோதும் பெண் மயிலுடன் உறவு கொள்வதில்லை. ஆண் மயிலின் கண்ணீரைப் பருகியே பெண் மயில் கர்ப்பம் தரிக்கிறது என்று அறிவியலுக்கு சற்றும் பொருத்தமில்லாத ஒன்றை உளறிக் கொட்டினார்.
இதற்கு நம்ம நெட்டிசன்கள் நீதிபதியை சமூக வலைத்தளத்தில் வறுத்தெடுத்து வருகின்றனர். அவற்றில் சில உங்களுக்காக..


சட்டபுத்தகத்திற்கு பதிலாக..
"ஆண் மயில் பிரம்மச்சாரி அதன் கண்ணீர் துளிகளால் தான் பெண் மயில் கர்ப்பமாகிறது - நீதிபதி
ஐ திங் இவர் சட்டப்புத்தகத்துக்கு பதிலா செக்ஸ் புத்தகம் படிச்சுட்டார்னு நினைக்கிறேன்" என்று ஆசிக் இலாஹி தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 



கிளிகளின் புலம்பல்
"மயில் காட்டுல குஜாலாதான் இருக்கு! உண்மையில கிளிங்க நாங்கதான்டா பிரம்மச்சாரி! கிளிஜோசியம்னு ஒண்டியா அடைச்சி வைச்சிடுறாங்க" என்று குட்டி கிரி பதிவிட்டுள்ளார்.

 





புக்குல வச்சா குட்டி போடுதே.. அப்படியா..
"மயில் கண்ணீரால குட்டி போடும்னு சொல்றப்போ நோட்புக்குக்கு உள்ள வச்சா குட்டி போடும்னு நாம நெனச்சது ஒன்னும் தப்பில்லையே" என்று அஸ்வின் அசி நக்கலடித்துள்ளார்.

 






அறிவியல் வாத்தியார் உயிரோட இருக்காரா?
"மயில் உறவு கொள்ளாது. ஆண் மயிலின் கண்ணீரைக் குடிப்பதன் மூலம்தான் பெண் மயில் கருத்தரிக்கிறது. அதனால்தான் மயில் தேசியப் பறவையாக உள்ளது. - ராஜஸ்தான் உயர்நீதிமன்ற நீதிபதி மகேஷ் சந்திர ஷர்மாவுக்கு அறிவியல் பாடம் எடுத்த வாத்தியார் இன்னமும் உயிரோட இருக்காரா தல?" என்று கேட்டுள்ளார் லெமூரியன் வாய்ஸ்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.