தனது ஹாலிவுட் படமான பேவாட்சை விளம்பரப்படுத்த நடிகை பிரியங்கா சோப்ரா பெர்லின் சென்றிருந்தார். அப்போது அரசு முறை பயணமாக பெர்லின் வந்த பிரதமர் நரேந்திர மோடியை அவர் சந்தித்து பேசினார்.
அந்த சந்திப்பின்போது பிரியங்கா தொடை தெரியும்படி உடை அணிந்திருந்தார்.
விமர்சனம்
ஒரு நாட்டின் பிரதமர் முன்பு இப்படியா அரைகுறையாக உடை அணிந்து கால் மேல் கால் போட்டு உட்கார்வது என்று நெட்டிசன்கள் பிரியங்கா சோப்ராவை வறுத்தெடுத்தனர்.
பிரியங்கா
பிரியங்காவோ தானும், தனது அம்மாவும் தொடை தெரியும்படி உடையணிந்தபோது எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு தன்னை கிண்டல் செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்தார்.
சன்னி
நாம் மிகவும் ஸ்மார்டான மனிதரை தான் இந்திய பிரதமராக தேர்வு செய்துள்ளோம். மனதில் பட்டதை பேசக்கூடியவர். அவருக்கு பிரியங்காவின் உடையில் பிரச்சனை இருந்திருந்தால் நிச்சயம் கூறியிருப்பார். ஆனால் அவர் எதுவும் கூறவில்லை என்கிறார் சன்னி.
உடை
எனக்கு பிரியங்காவை தெரியும். அவர் மக்களிடம் நல்லவிதமாக பழகுபவர். சமூகத்திற்கு உதவி செய்பவர். அதனால் அவரின் நடவடிக்கைகளை வைத்து அவரை மதிப்பிடலாமே தவிர உடையை வைத்து அல்ல என சன்னி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.