June 14, 2017
கல்லூரி மாணவி லாட்ஜில் கொலை? அழைத்து வந்த மர்ம வாலிபர் யார்?
கும்பகோணம் அருகே கல்லூரி மாணவி ஒருவர் லாட்ஜில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை செய்த மர்ம வாலிபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
கும்பகோணத்தில் நேற்று ஒரு வாலிபர் கல்லூரி மாணவி ஒருவருடன் லாட்ஜில் தங்கினார். பகல் முழுவதும் உள்பக்கம் பூட்டப்பட்டிருந்த அந்த அறை இரவில் வெளிப்பக்கம் பூட்டியிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த லாட்ஜ் ஊழியர்கள் மாற்றுச்சாவி கொண்டு அறையை திறந்து பார்த்தபோது அங்கு தங்கியிருந்த கல்லூரி மாணவி ரத்த வெள்ளத்தில் பிணமாக இருந்தார்.
உடனடியாக லாட்ஜ் நிர்வாகத்தினர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து கல்லூரி மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி அவருடைய அடையாள அட்டை மூலம் அவர் யார் என்பதை கண்டுபிடித்து அவருடைய பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர்
இதுகுறித்து முதல்கட்ட விசாரணையில் கொல்லப்பட்ட கல்லூரி மாணவி கும்கோணம் அருகே உள்ள திருப்புறம்பியத்தை சேர்ந்த பாண்டியன் என்பவரது 19 வயது மகள் கீர்த்திகா என்பதும் இவர் கும்பகோணத்தில் உள்ள தனியார் பாராமெடிக்கல் கல்லூரியில் 2–ம் ஆண்டு படித்து வந்ததும் தெரியவந்தது.
கல்லூரி மாணவி லாட்ஜில் கொலை? அழைத்து வந்த மர்ம வாலிபர் யார்?
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
June 14, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.