Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 13, 2017

45,000 அங்கீகரிக்கப்பட்ட சிறுவர் பராமரிப்பு நிலையங்களை நிறுவுவதற்கு 1.8 பில்லியன் டொலர்களை ஒதுக்கீடு


45,000 அங்கீகரிக்கப்பட்ட சிறுவர் பராமரிப்பு நிலையங்களை நிறுவுவதற்கு 1.8 பில்லியன் டொலர்களை ஒதுக்கீடு செய்யவுள்ளதாக ஒன்ராறியோவின் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னெடுக்கப்படவுள்ள இந்த திட்டத்தின் மூலம் நான்கு வயது மற்றும் அதற்கு குறைவான ஒரு இலட்சம் குழந்தைகள் பயன்பெறுவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறான திட்டங்கள் மூலம் குழந்தைகளுக்கான உயர்தர பராமரிப்புச் சேவைகளை பலரும் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கப்படுவதுடன், தேவைப்படுவோருக்கு குழந்தைகள் பராமரிப்புக்காக கட்டண கழிவுகளும் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

கனடாவில் சிறுவர் பராமரிப்புக்காக அதிக அளவு கட்டணம் செலுத்தப்பட வேண்டிய இடங்களில் ஒன்றாக ரொரன்ரோ பெரும்பாகம் இருந்து வருகின்றது. ஒரு குழந்தைக்காக மாதம் ஒன்றுக்கு 1,649 டொலர்கள் வரையில் செலுத்த வேண்டியிருப்பதாக கனேடிய மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.