Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 21, 2017

காதல் திருமணம் செய்த ஜோடிகள்: 30 நிமிடங்களில் உறவினர்கள் செய்த செயல்




காதல் திருமணம் செய்த ஜோடிகள்: 30 நிமிடங்களில் உறவினர்கள் செய்த செயல

தமிழகத்தில் காதல் திருமணம் செய்து 30 நிமிடங்களே ஆன நிலையில், அவர்களை உறவினர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் கரந்தை பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ்(22). இவர் பி.பி.ஏ. முடித்து விட்டு, அங்குள்ள மினி பஸ் ஒன்றில் டிரைவராக பணியாற்றி வருகிறார்.
இவர் வடக்கூர் பகுதியைச் சேர்ந்த அபிநயா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். அதன் பின் இவர்கள் இருவரும் இரண்டு வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.
இருவரும் வேறு ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களின் காதலுக்கு இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.


இந்நிலையில் அபிநயா நேற்று வெளியில் சென்று விட்டு வருவதாக கூறிவிட்டு பாபநாசத்திற்கு சென்றுள்ளார். அங்கு ராஜேசும் சென்றுள்ளார். இதைத் தொடர்ந்து இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர்.
இதனால் அருகில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். இந்த விவரம் அபிநயாவின் குடும்பத்திற்க்கு தெரியவர உடனடியாக அவர்கள் தங்கள் உறவினர்கள் சிலரை அங்கு அழைத்துச் சென்று, திருமணம் செய்து கொண்ட இருவரையும் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர்.
இதில் சிலர் அவர்களை உருட்டுகட்டை வைத்தும் தாக்கியுள்ளனர். அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக அருகில் உள்ள காவல்நிலையத்திற்கு சென்று தஞ்சம் அடைந்தனர்.
இருவரையும் சமாதானப்படுத்தி விசாரணை செய்த பொலிசாரிடம், காதல் ஜோடிகள் தங்களுக்கு 30 நிமிடங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்ததையும் தாங்கள் உருட்டுக்கட்டை மற்றும் கற்களால் தாக்கப்பட்டதையும் கூறியுள்ளனர்,
மேலும் அபிநயாவின் உறவினர்கள் ஜாதிப்பெயரை கூறி திட்டியதாக ராஜேஷ் புகார் அளித்ததைத் தொடர்ந்து அவர்கள் மீது பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.