Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 23, 2017

சிறையில் இருந்து விடுதலை ஆகும் கைதிகள் சொந்த நாடு திரும்ப உதவும் இந்திய தொழிலதிபர்


துபாய் சிறைகளில் இருந்து விடுதலை செய்யப்படும் வெளிநாட்டு கைதிகள் சொந்த நாடு திரும்புவதற்காக 130,790 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி வழங்க முன்வந்துள்ளார் இந்திய தொழிலதிபர் ஒருவர். மும்பையில் பிறந்த பரோஸ் மெர்சண்ட் என்பவர், துபாயில் பியூர் கோல்ட் ஜூவ்ல்லர் நிறுவனத்தின் சேர்மனாக உள்ளார். இவர் வெளிநாட்டு கைதிகள் சொந்த ஊர் திரும்புவது தொடர்பாக அங்குள்ள தொண்டு நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளார்.

அதன்படி துபாய் சிறைகளிலிருந்து விடுதலையாகும் வெளிநாட்டு கைதிகள், தங்கள் சொந்த ஊர் திரும்பி குடும்பத்தினருடன் சேர அவர்களுக்கு விமான டிக்கெட் எடுத்து தரப்படும். தாயகம் திரும்ப தயாராக உள்ள வெளிநாட்டு கைதிகள் பற்றிய விபரத்தை, மாதந்தோறும், தொண்டு நிறுவனம் அளிக்கும் போது நிதி ஒதுக்கப்படும். தற்போது 132 கைதிகள் விடுதலைக்காக 150,000 தினார்களை பிரோஸ் வழங்கியுள்ளார். இதுகுறித்து தொழிலதிபர் பிரோஸ் கூறியதாவது: இந்த குற்றவாளிகள் சூழ்நிலை கைதிகள். உண்மையான குற்றவாளிகள் அல்ல. கடன் காரணமாக அவர்கள் சிறையில் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.