Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 16, 2017

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து கணினிகளுக்கும் நிலவேம்பு கசாயம் கொடுக்க அமைச்சர் செல்லூர் ராஜூ உத்தரவு! - சும்மானாச்சிக்கும்


 ரேன்சம்வேர் வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில் அதனை வைத்து விளையாடி வருகின்றனர் நெட்டிசன்ஸ். வைரஸையே அச்சுறுத்தும் மீம்ஸ்கள் சமூக வளைதளங்களில் குவிந்து வருகின்றனர்.

வழக்கமாக மீம்ஸ்கள் வெளியிட காமெடியன்களின் படங்களை பயன்படுத்தும் நெட்டிசன்கள் இப்போதெல்லாம் செல்லூர் ராஜூவின் படத்தையும் பெயரையும் பயன்படுத்தி வருகின்றனர்.
ரேன்சம்வேர் வைரஸால் 150 நாடுகளிள் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ரேன்சம்வேர் வைரஸையும் ஹேக்கர்களையும் கலாய்த்து மீம்ஸ்கள் குவிந்து வருகின்றன. அவற்றில் சில...

பாத்து போட்டு குடுங்கயா...
உங்க சிஸ்டம பிளாக் பண்ணிட்டோம்.. 300 டாலர் கொடுத்தாதான் டேட்டா வரும்.. 30 ரூபாய் தர்றேன் அன் பிளாக் பண்றியா? யோவ் சாஃப்ட்வேர்லாம் வச்சி ஹேக் பண்ணிருக்கோம் கொஞ்சம் பாத்து போட்டு குடுங்கயா...

எது ரசம் சோறு மோரா?
புதுசா ஏதோ வைரஸ் வந்து இருக்குன்னு சொன்னியே என்ன அது? ரேன்சம்வேர்! எது ரசம் சோறு மோரா? யோவ் ரேன்சம்வேர் யா..

ஒன்னும் இல்ல தம்பி
ஒன்னும் இல்ல தம்பி ஒரு 300 டாலர் கட்டி ரெக்கவரி பண்ணிருங்க.. என ரேன்சம்வேர் வைரஸை கலாய்க்கிறது இந்த மீம்

அடேய் யார்ரா அது?
அடேய் யார்ரா அது ஏடிஎம் க்ளோஸ் பண்றாங்கன்னு வாட்ஸ்அப்ல மெசேஜ் அனுப்பறது..?

நிலவேம்பு கசாயம் உத்தரவு
தமிழ்நாட்டிலுள்ள அனைத்து கணினிகளுக்கும் நிலவேம்பு கசாயம் கொடுக்க அமைச்சர் செல்லூர் ராஜூ உத்தரவு...

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.