Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 8, 2017

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் ‘ஹைட்ரோ கார்பன்’ திட்ட சோதனைக்கு மத்திய அரசு அனுமதி


தமிழ்நாட்டில் தஞ்சை உள்பட 4 மாவட்டங்களில் ‘ஹைட்ரோ கார்பன்’ திட்ட சோதனைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.

4 மாவட்டங்களுக்கு அனுமதி
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ‘ஹைட்ரோ கார்பன்’ எடுக்கும் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முயற்சி மேற்கொண்டது. ஆனால் சுற்று வட்டார பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தியதால் அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

இந்த நிலையில் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் அரியலூர் ஆகிய 4 மாவட்டங்களில் ‘ஹைட்ரோ கார்பன்’ திட்ட சோதனையை நடத்த எண்ணெய் நிறுவனத்துக்கு (ஓ.என்.ஜி.சி.), மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

மக்கள் போராட்டம் இல்லை...
இதில் தஞ்சை மாவட்டத்தில் 5 கிணறுகளும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 9 கிணறுகளும், அரியலூர் மாவட்டத்தில் 6 கிணறுகள், திருவாரூர் மாவட்டத்தில் ஒரு கிணறு என மொத்தம் 21 கிணறுகள் சோதனைக்காக தோண்டப்பட உள்ளன.

மேற்கண்ட 4 மாவட்டங்களிலும் ‘ஹைட்ரோ கார்பன்’ திட்டத்தை எதிர்த்து மக்கள் போராட்டங்கள் நடத்தவில்லை என்று எண்ணெய் நிறுவனத்துக்கு, தமிழக அரசு பிரமாண பத்திரம் வழங்கியதாக தெரிகிறது.

இந்த பிரமாண பத்திரத்தை சுட்டிக்காட்டித்தான் மத்திய அரசிடம், எண்ணெய் நிறுவனத்தினர் ‘ஹைட்ரோ கார்பன்’ சோதனைக்கான அனுமதியை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மக்கள் போராட்டம் இல்லை என்று மாநில அரசை நிர்பந்தித்து  பிராமண பாத்திரம் வாங்கியதாக எதிர் கட்சியினர் குற்றம் சாற்றி வருகின்றனர்  
என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில்  மீத்தேன் திட்டம் உறுதி என்பதே இதில் இருந்து தெரிகிறது  என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.