Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 17, 2017

ஏட்டைய்யா இங்கிருந்த ரோட்டை காணமய்யா: வடிவேலு ஸ்டைலில் போலீசில் புகார்


தெற்கு டெல்லியை சேர்ந்த மக்கள் சாலை ஒன்று காணாமல் போய்விட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

ஒரு படத்தில் வைகைப்புயல் வடிவேலு கிணற்றை காணவில்லை என்று புகார் கொடுப்பார். அதே ஸ்டைலில் தெற்கு டெல்லியை சேர்ந்த மக்கள் சாலை ஒன்றை காணவில்லை என்று சி.ஆர். பார்க் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

கடந்த 2014ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் சாலையை காணவில்லை என்று அவர்கள் தங்களின் புகார் மனுவில் தெரிவித்துள்ளனர். மேலும் சாலையை காணவில்லை என்று கல்காஜி காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஆலக்நந்தா பகுதியை சேர்ந்த 33 பேர் கொளுத்தும் வெயிலில் காணாமல் போன சாலையை தேடினார்கள். மேலும் சாலையை நேற்று மாலை 6 மணிக்குள் கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு ரூ.10 ஆயிரம் சன்மானம் அளிக்கப்படும் என்று அறிவித்தனர்.

1.5 கிலோமீட்டர் வரையிலான அந்த சாலை வரைபடத்தில் உள்ளது நிஜத்தில் இல்லை என்கிறார்கள் மக்கள். அந்த இடத்தில் அரசு பள்ளி ஒன்றும், டிடிஏ காலனியும் வந்துவிட்டதாம்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.