Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 18, 2017

துபாய் அமீரகத்தில் புதிய டிரைவர்களுக்கு 2 வருட லைசென்ஸ் மட்டுமே !


அமீரகத்தில் துபாய்  புதிய போக்குவரத்து சட்டங்கள் மற்றும் திருத்தங்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இதன்படி, எதிர்வரும் 2017 ஜூலை 1 ஆம் தேதி முதல் புதிதாக லைசென்ஸ் எடுக்கும் அனைத்து டிரைவர்களுக்கும் 2 வருட லைசென்ஸ் மட்டுமே வழங்கப்படும்.

அமீரகத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டும் ஒவ்வொரு 10 வருடத்திற்கு ஒருமுறையும், வெளிநாட்டவர்களுக்கு 5 வருடத்திற்கு ஒருமுறையும் புதுப்பிக்கப்படும் என்றாலும் ஏற்கனவே நடைமுறையிலுள்ள சட்டத்தின்படி லைசென்ஸ் பெற்றவர்களுக்கு மட்டும் அடுத்த புதுப்பித்தல் தேதி வரை பழைய நடைமுறையே செல்லும்.

அமீரக தேசிய போக்குவரத்து சபை (Federal Traffic Council) வழங்கும் அறிவுரைக்கேற்ப குறிப்பிட்ட சில வகைகளின் வருபவர்களுக்கு மட்டும் ஒரு வருடத்திற்கு அல்லது அதற்கும் குறைவான காலத்திற்கோ லைசென்ஸ் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்றாலும் 'அந்த குறிப்பிட்ட வகையினர் யார்' என்பது குறித்து செய்தித்தாள்களில் விபரமில்லை.

அதேபோல் நாள்பட்ட தீராத வியாதியஸ்தர்கள், வலிப்பு நோய், கடும் நீரிழிவு உள்ளவர்களுக்கும் லைசென்ஸ் முற்றிலும் வழங்கப்படாது. மேலும் சுகாதாரத் துறையுடன் இணைக்கப்பட்டுள்ள கணிணிவழித் தொடர்பு மூலம் இத்தகைய டிரைவர்களின் உடல்நலம் குறித்த தகவல்கள் பெறப்படும்.

குடியிருப்புப் பகுதிகளில் இயக்கப்படும் வாகனங்கள் 40 km/ph வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும். வாகனங்கள் அதிக சப்தம் எழுப்பவும் மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்களின் அருகில் செல்லும் பாதசாரிகளை அச்சுறுத்தும் வகையில் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பஸ்களுக்கு என தனி தடம் மற்றும் நேரத்தை ஒதுக்கித் தருவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. எலக்ட்ரிக் ஸ்கூட்டர், பாலைவன பைக் உட்பட அனைத்தும் கட்டாய பதிவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இத்தகைய வாகனங்களை மணல் மற்றும் பாலைவெளிகளில் மட்டுமே இயக்க வேண்டும்
.
10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் மட்டுமே வாகனங்களில் முன்பக்கம் அமரவும், கட்டாயம் பாதுகாப்பு பெல்ட் அணியவும் உத்தரவிடப்பட்டுள்ளது. வாகனங்களின் முன்பக்கம் அமரும் பெரியவர்களோ, 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளோ பாதுகாப்பு பெல்ட் அணியத் தவறினால் டிரைவர் மீது 400 திர்ஹம் அபராதமும் 4 கரும்புள்ளிகளும் விதிக்கப்படும் என்பது போன்ற பல புதிய சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

Source: Gulf News

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.