Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 3, 2017

ஊர் கூடி, பங்கு வைத்து விவசாயம் காரைக்குடி அருகே விவசாயிகள் அசத்தல்


காரைக்குடி அருகே 6 கிராம விவசாயிகள் ஒருங்கிணைந்து தண்ணீரை பங்கு வைத்து விவசாயம் செய்து அசத்துகின்றனர். விலங்குகளிடம் இருந்து பாதுகாக்க 250 ஏக்கருக்கும் கம்பி வேலி அமைத்துள்ளனர்.காரைக்குடி அருகே வ.சூரக்குடி புக்குடி கண்மாய் மூலம் 250 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. இங்கு சூரக்குடி, சொக்கம்பட்டி, நங்கம்பட்டி, பூவாண்டிபட்டி, இடையன்குடிபட்டி, சொக்கானேந்தல் ஆகிய 6 கிராம விவசாயிகள் விவசாயம் மேற்கொள்கின்றனர்.

இவர்கள் ஆடு, மாடுகள் செல்லாத வகையில் விவசாய நிலங்களை சுற்றிலும் 3.5 கி.மீ., க்கு கம்பி வேலி அமைத்து பாதுகாக்கின்றனர். ஒரே ஒரு பகுதியில் மட்டும் விவசாயிகள் நிலங்களுக்கு சென்று, வரும் வகையில் நுழைவாயில் அமைத்துள்ளனர்.

நிலங்களுக்கு கண்மாய் நீரை திறந்துவிட காவலாளிகள் நியமித்துள்ளனர். அவர்கள் பங்கு வைத்து முறைப்படி தண்ணீர் திறந்து விடுகின்றனர். அவர்களை தவிர வேறு யாரும் தண்ணீர் பாய்ச்ச முடியாது. அனைவரும் நெல் சாகுபடி செய்கின்றனர். கோடையில் தண்ணீர் இருந்தால் உளுந்து பயிரிடுகின்றனர். அதிலும் கண்மாயில் இருக்கும் நீரின் அளவை பொறுத்தே சாகுபடி பரப்பும் நிர்ணயிக்கப்படுகிறது.

பெரும்பாலும் கோடையில் தண்ணீர் சிக்கனத்திற்காக ஒவ்வொரு விவசாயியும் தங்களது நிலத்தில் 6 ல் ஒரு பங்கு மட்டுமே சாகுபடி செய்கின்றனர். கோடையிலும் காவலாளிகள் தான் தண்ணீர் பாய்ச்சுகின்றனர்.சூரக்குடியைச் சேர்ந்த பி.சண்முகம் கூறியதாவது: கண்மாயில் உள்ள மடைகருப்பர் கோயிலில் சாமி கும்பிட்டு, காவலாளிகளிடம் மண்வெட்டியை கொடுத்துவிடுவோம். நாங்கள் தண்ணீர் பாய்ச்ச மண்வெட்டி எடுக்க மாட்டோம். அறுவடையின்போது காவலாளிகளுக்கு நிலத்துக்கு தகுந்த கூலி (நெல்) வழங்குவோம். விவசாயத்தை உயிர்நாடியாக நினைத்து வாழ்கிறோம். தண்ணீர் இல்லாத காலத்தில் பாதிப்பு ஏற்படுகிறது. 250 ஏக்கருக்கும் 2 'போர்வெல்கள்' அமைத்தால் போதும். இதற்கு அரசு நிதியுதவி அளிக்க வேண்டும், என்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.