ஒரு கிழ ஆமை தன் குடும்பத்தோடு மரப்பொந்து ஒன்றில் வசித்து வந்தது. ஒரு சமயம், அந்த ஆமைக்குக் கடுமையான வியாதி. படுத்த படுக்கையாகக் கிடந்தது.
அந்தப் பக்கம் வந்த டாக்டர் முயல், உனக்குப் பாரிச வாயு வந்திருக்கிறது. ''நீ படுக்கையிலே பல மாதங்கள் இருந்து விடாமல் இருக்க மருந்து சாப்பிட வேண்டும் என் வீட்டிற்கு யாரையாவது அனுப்பு மருந்து கொடுத்து விடுகிறேன்,'' என்று ஆமையிடம் கூறியது.
ஆமையும் தன் வேலைக்காரன் நத்தையை, உடனே அனுப்பி வைத்தது.
மருந்து வாங்கச் சென்ற நத்தை, ஒரு மாதமாகியும் திரும்பி வரவில்லை.
டாக்டர் முயலும் அந்தப் பக்கம் வரவில்லை. டாக்டருக்கு என்ன கோபமோ என்னவோ என்று இருந்து விட்டது ஆமை.
டாக்டர் முயலும், ஆமைக்கு நம்மிடம் வைத்தியம் செய்து கொள்ள இஷ்டமில்லை போலிருக்கிறது என்று பேசாமலே இருந்தது.
நாளாக ஆக ஆமையின் உடம்பு மோசமாகியது. தலையை நீட்ட முடியாமல் தவித்தது. இந்தச் சமயத்தில் தான் ஆமையைப் பார்க்க வந்தது அதன் சிநேகிதன் நரி, நரியிடம் தன் குறையெல்லாம் சொல்லி அழுதது ஆமை.
''மருந்து வாங்கச் சென்ற நத்தை ஒரு மாதம் ஆகிறது. இன்னும் திரும்பியபாடில்லை,'' என்றது.
''போயும் போயும் நத்தைதானா உமக்கு அகப்பட்டது. அது போய்த் திரும்பி வரப் பத்து வருஷம் ஆகுமே... வேறு நல்ல ஆளா அகப்படவில்லை? நத்தையைப் போய் நீர் நம்பி, இப்படி உடம்பைக் கெடுத்துக் கொண்டீரே!'' என்று நரி இடி இடியென்று சிரித்தது.
''என்ன செய்வது, நத்தையை நம்பியது முட்டாள்தனம்!'' என்று வருத்தப்பட்டது ஆமை.
''போதும்! இது மாதிரியெல்லாம் என்னைப் பற்றிக் கேவலமாகப் பேசித் திட்டினால் நான் டாக்டரிடம் போகவே மாட்டேன்!'' என்ற குரல் கேட்டது.
ஆமையும், நரியும் திரும்பிப் பார்த்தன. கதவிடுக்கில் இருந்த நத்தை தலையை வெளியே நீட்டிக் கொண்டிருந்தது.
''அடபாவி! நீ இன்னும் இந்த இடத்தை விட்டே நகரவில்லையா?'' என்று கேட்டு விட்டு, மூர்ச்சித்துப் படுக்கையில் சாய்ந்த ஆமை அதன்பிறகு எழுந்திருக்கவே இல்லை.
அந்தப் பக்கம் வந்த டாக்டர் முயல், உனக்குப் பாரிச வாயு வந்திருக்கிறது. ''நீ படுக்கையிலே பல மாதங்கள் இருந்து விடாமல் இருக்க மருந்து சாப்பிட வேண்டும் என் வீட்டிற்கு யாரையாவது அனுப்பு மருந்து கொடுத்து விடுகிறேன்,'' என்று ஆமையிடம் கூறியது.
ஆமையும் தன் வேலைக்காரன் நத்தையை, உடனே அனுப்பி வைத்தது.
மருந்து வாங்கச் சென்ற நத்தை, ஒரு மாதமாகியும் திரும்பி வரவில்லை.
டாக்டர் முயலும் அந்தப் பக்கம் வரவில்லை. டாக்டருக்கு என்ன கோபமோ என்னவோ என்று இருந்து விட்டது ஆமை.
டாக்டர் முயலும், ஆமைக்கு நம்மிடம் வைத்தியம் செய்து கொள்ள இஷ்டமில்லை போலிருக்கிறது என்று பேசாமலே இருந்தது.
நாளாக ஆக ஆமையின் உடம்பு மோசமாகியது. தலையை நீட்ட முடியாமல் தவித்தது. இந்தச் சமயத்தில் தான் ஆமையைப் பார்க்க வந்தது அதன் சிநேகிதன் நரி, நரியிடம் தன் குறையெல்லாம் சொல்லி அழுதது ஆமை.
''மருந்து வாங்கச் சென்ற நத்தை ஒரு மாதம் ஆகிறது. இன்னும் திரும்பியபாடில்லை,'' என்றது.
''போயும் போயும் நத்தைதானா உமக்கு அகப்பட்டது. அது போய்த் திரும்பி வரப் பத்து வருஷம் ஆகுமே... வேறு நல்ல ஆளா அகப்படவில்லை? நத்தையைப் போய் நீர் நம்பி, இப்படி உடம்பைக் கெடுத்துக் கொண்டீரே!'' என்று நரி இடி இடியென்று சிரித்தது.
''என்ன செய்வது, நத்தையை நம்பியது முட்டாள்தனம்!'' என்று வருத்தப்பட்டது ஆமை.
''போதும்! இது மாதிரியெல்லாம் என்னைப் பற்றிக் கேவலமாகப் பேசித் திட்டினால் நான் டாக்டரிடம் போகவே மாட்டேன்!'' என்ற குரல் கேட்டது.
ஆமையும், நரியும் திரும்பிப் பார்த்தன. கதவிடுக்கில் இருந்த நத்தை தலையை வெளியே நீட்டிக் கொண்டிருந்தது.
''அடபாவி! நீ இன்னும் இந்த இடத்தை விட்டே நகரவில்லையா?'' என்று கேட்டு விட்டு, மூர்ச்சித்துப் படுக்கையில் சாய்ந்த ஆமை அதன்பிறகு எழுந்திருக்கவே இல்லை.
No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.