Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 28, 2016

இலவசமாக பயணிகளை ஏற்றிச் செல்லும் ஆட்டோ டிரைவர்


சென்னையை  சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவர், இலவசமாக பயணிகளை ஏற்றிச் சென்று அப்துல்கலாமிற்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.


மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது மனதிலும் நிறைந்த அப்துல்கலாமுக்கு அனைவரும் இதய அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் தேனாம்பேட்டையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் கலையரசன், அப்துல்கலாமுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று ஒருநாள் மட்டும் தனது ஆட்டோவில் பயணிகளை இலவசமாக சவாரி ஏற்றிச் செல்கிறார். இது தொடர்பான துண்டு பிரசுரத்தை தனது ஆட்டோவில் அவர் ஒட்டி இருக்கிறார். அதில்,

“நான் விட்டுச்சென்ற பணியை தொடருங்கள் மாணவ செல்வங்களே!!

- டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்.

27.7.2016 இன்று ஒரு நாள் மட்டும் ஆட்டோவில் இலவசமாக பயணியுங்கள்”

இந்த ஆட்டோ டிரைவர், கடந்த ஆண்டு, அப்துல் கலாம் மறைந்த போதும் இதே போல் பயணிகளை இலவசமாக ஏற்றிச்சென்று அஞ்சலி செலுத்தினார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.