Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 26, 2016

பீகாரில் பாம்புகளுடன் வாழும் கிராமமக்கள்


பீகார் மாநிலத்தில் உள்ள கிராமம் ஒன்றில், பொதுமக்கள் பாம்புகளுடன் வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.

பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால் பீகார் மாநிலத்தில் உள்ள சமஸ்திபூர் கிராமம், பாம்புகளை விளையாட்டு பொருளாக கருதி வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு பாம்பு கடித்து மரணம் ஏற்பட்டதே இல்லை என்பது ஆச்சரியமான ஒன்றாகத் தான் இருக்கிறது. குறிப்பாக நாக பஞ்சமி நாளில், கிராம மக்கள் பாம்புகளை பொம்மைகள் போன்று பிடித்து விளையாடுகின்றனர்.

இதுகுறித்து கிராம மக்களிடம் கேட்டதற்கு, தங்களுக்கு பகவதி அம்மனின் அருள் இருப்பதாகவும், அதனால் பாம்புகளால் எந்தவித தீங்கும் ஏற்பட்டதே இல்லை என்று கூறுகின்றனர். சமஸ்திபூர் கிராமத்தில் இருந்து 23 கி.மீ தொலைவில் உள்ள சிந்தியா காட் பகுதியில், பொதுமக்கள் தங்கள் வீடுகளில் பாம்புகளை வீட்டுப் பிராணிகளை போல வளர்த்து வருகின்றனர்.

நாகப் பாம்பு மிகவும் விஷமிக்கது என்று கூறக் கேட்டிருப்போம். ஆனால் அந்த நாகப்பாம்புகளுடனும் எந்தவித அச்ச உணர்வும் இன்றி விளையாடுகிறார்கள், வாழ்கிறார்கள். நாகபஞ்சமி நாளில் பாம்புகள் பிடிக்கும் பழக்கத்தை கொண்டுள்ளனர். இதனை கடந்த 300 ஆண்டுகளாக பின்பற்றி வருகின்றனர்.

இந்த நாளில் தங்கள் தெய்வத்திடம், எதை வேண்டினாலும் அது நிறைவேறும் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.