Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 14, 2017

ஜக்கு - மக்கு ஜோக்ஸ்!


ஜக்கு: ஏண்டா மக்கு ஒரு கால் பிளாட்பாரத்திலயும், ஒரு கால் ரோடுலையும் வச்சு நடக்கற?

மக்கு: நல்லவேளை ஞாபகப் படுத்தினடா ஜக்கு, நான் கூட எங்க நொண்டியாயிட்டேனோன்னு பயந்தே போயிட்டேன்.
-------------------

ஜக்கு: என்னடா 5 மணிக்கு வரேன்னுட்டு ஆறரை மணிக்கு வர்ற?

மக்கு: ரோடுல ஒத்தன் 500ருபா நோட்டைத் தொலைச்சுட்டு தேடிக்கிட்டு இருந்தான்!

ஜக்கு: பரவாயில்லையே! தேடி எடுத்துக் கொடுத்தியா?

மக்கு: இல்லை அவர் போற வரைக்கும் நோட்டு மேலேயே நின்னுகிட்டு இருக்கவேண்டியதாப்போச்சு.
---------------------

மக்கு: ஏன் எல்லாம் ஓடறாங்க?

ஜக்கு: இது பேர் ஓட்டப்பந்தயம் 'கப்' கிடைக்கணம்னு ஓடறாங்க.

மக்கு: யார் கப் வாங்குவாங்க?

ஜக்கு: யார் பர்ஸ்ட் வராங்களோ அவங்க கப் வங்குவாங்க!

மக்கு: அப்பறம் எதுக்கு எல்லாரும் ஓடறாங்க?
மக்கு: என் பையன் தங்கமானவன்டா!

ஜக்கு: எப்படி சொல்ற?

மக்கு: சிகரெட், தண்ணி, பொம்பள... எந்த கெட்டப்பழக்கமும் கிடையாது.

ஜக்கு: உன் பையனுக்கு என்ன வயசு?

மக்கு : ஒரு வயசு.
----------------------

ஜக்கு: தெரியாம கவர்ல 4 ரூபாய்க்கு ஸ்டாம்ப் ஒட்டிட்டேன். 2 ரூபாக்கு ஒட்டினாலே போதும்.

மக்கு: அதனால என்ன? இன்னும் 2 ரூபாய்க்கு ஸ்டாம்ப் வாங்கு

ஜக்கு: எதுக்கு அதான் 4 ரூபாய்க்கு ஸ்டாம்ப் ஒட்டியிருக்கேனே

மக்கு: இன்னொரு 2 ரூபாய்க்கு ஸ்டாம்ப் வாங்கி, கவர்ல ஒட்டி நடுப்பற மைனஸ் ஸ்டாம்புன்னு எழுதிடு!
----------------

ஜக்கு: ஏய் மக்கு எங்க போய்கிட்டிருக்க?

மக்கு: தொவரம் பருப்பு வாங்க மீனாட்சி மெடிக்கல்ஸ் போயிட்டு இருக்கேன்.

ஜக்கு: பருப்பு வாங்க எதுக்குடா மெடிக்கல் ஷாப்பு?

மக்கு: மீனாட்சி + மெடிகல்ஸ்னு போட்டுருக்கானே.
--------------------

ஜக்கு: வாடா சும்மா பீச்சுக்கு போயிட்டு வரலாம்...

மக்கு: நா வர்லப்பா... அங்க ஒரே மண்ணா இருக்கும்!

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.