Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 15, 2017

கடவுள் யாருக்கு வரம் கொடுப்பார்?


"தினம் மூணு வேளை குளிச்சு, ஆறு வேளை பூஜை பண்றேன்... எனக்கே எதுவும் கிடைக்கலை!" என பாபா டெல்லி கணேஷ் மாதிரி புலம்பிக் கொண்டிருப்பவரா நீங்கள்..?

ஏன் உங்களுக்கு கடவுள் வரம் கொடுக்கவில்லை என எப்போதாவது யோசித்துப் பார்த்ததுண்டா..?

கடவுளின் பார்வை யாருக்குக் கிடைக்கும்..? உங்களுக்காக ஒரு குட்டிக் கதை...


ராமசாமியும், முனுசாமியும் 'முஸ்தபா... முஸ்தபா' பாட்டின் அப்பாஸ் - வினீத் மாதிரி திக் ஃப்ரண்ட்ஸ். இரண்டு பேருக்குமே வயது 32 தாண்டியும் கல்யாணம் ஆகவில்லை. போகாத ஊரில்லை; தேடாத வலைத்தளம் இல்லை. பெண் அமையவில்லை. உள்ளூர் ஜோசியர் உறுதியாகச் சொன்னார்... பங்குனி உத்திரத்துக்கு பழனி போய் முருகனை உருகி வேண்டினால் ஆவணிக்குள் அழகு தேவதை மனைவியாக வந்து சேருவார் என்று.

புறப்பட்டுப் போனார்கள். பழனியில் பஸ்ஸை விட்டு இறங்கியதும் மொட்டை போட்டுக்கொண்டு, சண்முக நதியில் குளிப்பதற்காக இறங்கினார்கள். சூப்பரான மீன்கள் துள்ளிக் குதிப்பதைப் பார்த்ததும் முனுசாமிக்கு மீன் சாப்பிடும் ஆசை வந்தது. "டே ராமு இன்னைக்கு மிலிட்டரி ஹோட்டல்ல மீன் வறுவல் சாப்பிட்டுட்டு நாளைக்கு மலை ஏறுவோம்" என்றான் முனுசாமி.

"வந்த காரியத்தை விட்டுவிட்டு நாக்கு ருசிக்கு ஆசைப்பட்டா சரியா வராது. நீ வராட்டியும் பரவாயில்லை; நான் போகிறேன்" என சொல்லிவிட்டு மலையேற புறப்பட்டான் ராமசாமி.

"இந்த நேரம் முனுசாமி மிலிட்டரி ஹோட்டலுக்குள் போயிருப்பான்... இப்ப மீன் வறுவல் ஆர்டர் பண்ணிருப்பான்... வறுவலை நல்லா ருசிச்சு சாப்பிட்டுக்கிட்டிருப்பான்...'' என்ற சிந்தனை ஓட்டம்தான் மலையேற தொடங்கியதிலிருந்து மூலவரை வணங்கிவிட்டு கீழே இறங்கும் வரை ராமசாமியின் மனதில் படமாய் ஓடியது.


"இப்ப ராமு மலையேறிருப்பான்... பிரகாரத்தை சுற்றியிருப்பான்... மூலவர் தரிசனம் முடித்திருப்பான்... மலை இறங்கியிருப்பான்..." என்ற எண்ணங்களே மீன் சாப்பிட்டுக்கொண்டிருந்த முனுசாமியின் மனதில் ஓடியது.

ஆவணி முடிவதற்குள் முனுசாமிக்கு திருமணம் முடிந்துவிட்டது. ராமசாமி மறுபடியும் பங்குனி உத்திரத்துக்கு பழனி போக திட்டமிட்டமிட்டான்.

மனம் லயித்து செய்யாத செயல் வெற்றிபெறாது என்பதுதானே பிராக்டிக்கலான உண்மை.
இப்போது முடிவுசெய்துகொள்ளுங்கள்... நீங்கள் ராமசாமியா? முனுசாமியா?

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.