July 30, 2017
பயங்கரவாதிகளின் விமான தாக்குதல் ஆஸ்திரேலியாவில் சதிதிட்டம் முறியடிப்பு !
ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில் வெடிகுண்டு மூலம் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுப் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணியை போலீஸ் அதிரடியாக தொடங்கியது.
சோனையில் ஈடுபட்டது. சிட்னியின் புறநகரான சர்ரி ஹில்ஸ், லகெம்பா, விலேபார்க் மற்றும் பஞ்ச்பவுல் உள்ளிட்ட பகுதியில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அப்போது சந்தேகப்படும் நிலையில் இருந்த 4 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது எதிர்பாராத விதமாக விமானத்தை தரையில் மோத செய்து தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டது தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து 4 பேரை போலீசார் கைது செய்தனர். இதன்மூலம் பயங்கரவாதிகளின் தாக்குதல் முறியடிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல் தெரிவித்தார். ஆஸ்திரேலியாவின் விமான நிலையங்களில் கடும் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
சோதனையின் போது ஆஸ்திரேலிய பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் வெடிகுண்டுகளை தயாரிக்க பயன்படும் உதிரி பொருட்களையும் பறிமுதல் செய்து உள்ளனர். கைது செய்யப்பட்ட நான்கு பேரும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பால் ஈர்க்கப்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆஸ்திரேலியாவின் புலனாய்வு பிரிவு அதிகாரி ஆண்ரீவ் கோல்வின் பேசுகையில், சமீப நாட்களாக, சிட்னியை சேர்ந்த சிலர் பயங்கரவாத தாக்குதலை முன்னெடுக்க திட்டமிட்டு வருகிறார்கள் என பாதுகாப்பு முகமைகளுக்கு தகவல் கிடைக்கப்பெற்று வந்தது.
பயங்கரவாத தாக்குதலை எங்கு, எப்போது நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது என தெரியவரவில்லை என கூறிஉள்ளார். விசாரணை முடிந்ததும் முழு தகவல்கள் தெரியவரும் என குறிப்பிட்டு உள்ளார்.
பயங்கரவாதிகளின் விமான தாக்குதல் ஆஸ்திரேலியாவில் சதிதிட்டம் முறியடிப்பு !
Reviewed by Admin
on
July 30, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.