July 30, 2017
கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் கொலை: பா.ஜ.க சார்பில் முழு அடைப்புக்கு அழைப்பு !
கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் ராஜேஷ் வெட்டி கொலை செய்யப்பட்டதை கண்டித்து இன்று கேரளா முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. கேரளா மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ், 34 , ஆர்.எஸ்.எஸ். பிரமுகரான இவர் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு நேற்று இரவு 9 மணி அளவில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.
திருவனந்தபுரம் அருகே ஸ்ரீகார்யம் என்ற பகுதியில் வந்த போது அவரை வழி மறித்த 15 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடியது.
இதில் அவரது கைகள் துண்டாகின. பலத்த காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராஜேஷ் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதன் காரணமாக தமிழகம் கேரள எல்லைப் பகுதியில் இருந்து பேருந்துகள் இயக்கப்படாமல் உள்ளன. கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து நாகை மற்றும் திருவனந்தபுரத்திற்கு செல்லும் அரசு பேருந்து இயக்கப்படவில்லை.
மேலும் நேற்று இரவு வந்த கேரள அரசு பேருந்துகல் திருவனந்தபுரத்திற்கு செல்லாமல் நாகர்கோவிலில் இருந்து களியக்காவிளை வரை மட்டுமே செல்கின்றன. இதனால் திருவனந்தபுரம் செல்லும் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் கொலை: பா.ஜ.க சார்பில் முழு அடைப்புக்கு அழைப்பு !
Reviewed by Admin
on
July 30, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.