Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 28, 2017

சூப்பர் லாபம் தரும் செட்டிநாடு பலகாரங்கள்


எல்லா வயதினருக்கும் ஏற்ற உணவு இட்லி. உடல் நலமில்லாதவர்களுக்குக்கூட பாதுகாப்பான உணவாகப் பரிந்துரைக்கப்படுகிற எளிய உணவு.  செய்யச் சுலபமானதுதான்... ஆனால், பல வீடுகளிலும் இட்லி, இட்லியாக வராததுதான் பிரச்னையே! வெள்ளை வெளேரென, மல்லிகைப்பூ இட்லி என்பது ஓட்டல்களில் மட்டும்தான் சாத்தியமா என்கிற கேள்வி பலருக்கும் உண்டு.‘‘உண்மையைச் சொல்லணும்னா இட்லி தயாரிக்கிறதுல ஏராளமான நுணுக்கங்கள் இருக்கு. தரமான அரிசி, உளுந்தைத் தேர்ந்தெடுக்கிறதுலேர்ந்து, அரைக்கிறது, கரைக்கிறது வரை இட்லி மிருதுவா வர பல விஷயங்களையும் கவனிக்கணும். அதையெல்லாம் சரியா பண்ணினாலே, எல்லாராலயும் மெதுமெது இட்லி செய்ய முடியும்’’ என்கிறார் சென்னையை சேர்ந்த காவேரி.

செட்டிநாட்டில் பிரபலமான பஞ்சு மாதிரியான இட்லி செய்வதில் நிபுணியான இவர், கார்பரேட் நிறுவனங்கள், அலுவலகங்கள், விசேஷங்கள் என எல்லாவற்றுக்கும்  சப்ளை செய்கிறார்.‘‘பூர்வீகம் செட்டிநாடுங்கிறதால, எங்க வீட்ல எப்போதும் அந்தப் பக்கத்து சாப்பாடு பிரதானமா இருக்கும். அதுல முக்கியமானது இட்லி. எங்க வீட்ல இட்லி சாப்பிடற யாரும், அதோட செய்முறை ரகசியம் கேட்காமப் போக மாட்டாங்க. அக்கம்பக்கத்து வீடுங்களுக்குத் தெரிய வந்து, அப்படியே அவங்கவங்க வேலை பார்க்கிற ஆபீஸ், கம்பெனிகளுக்கு சப்ளை பண்ணச் சொல்லிக் கேட்டாங்க. இட்லி செய்யறது ஒண்ணும் கம்பசூத்திரம் இல்லை. கொஞ்சம் மெனக்கெடணும். பொறுமை வேணும். அவ்வளவுதான்’’ என்கிற காவேரி, மல்லிகைப்பூ இட்லி தயாரிப்பதையே பிசினஸாக செய்ய நம்பிக்கை தருகிறார்.

‘‘பஞ்சு மாதிரியான இட்லிக்கு தரமான அரிசியும், உளுந்தும் அவசியம். உப்பும் தண்ணீரும் வேணும். முதல்ல வீட்டு அளவுல செய்து பார்க்க, ஏற்கனவே உள்ள கிரைண்டர், பாத்திரங்களே போதும். 100 ரூபாய் முதலீட்டுலகூட ஆரம்பிக்கலாம். சில கடைகள்ல செட்டிநாடு இட்லி கிடைக்குது. அது அப்படி மிருதுவா வர, சோடா மாதிரி தேவையில்லாத பொருட்களைச் சேர்க்கிறதா சொல்றாங்க. வீட்ல பண்ணும் போது வெந்தயம்கூட தேவையில்லை.

பொதுவா இட்லியை செய்த உடனே சாப்பிடணும். ஆறினா கல் மாதிரி ஆயிடும். ஆனா, இந்த செட்டிநாட்டு இட்லி எத்தனை மணி நேரமானாலும் சாஃப்டாவே இருக்கும்’’ என்கிறார் காவேரி. "இட்லி பிடிக்காதவங்களே இருக்க மாட்டாங்க. தினசரி ஆர்டர் தவிர, விசேஷங்களுக்கான ஸ்பெஷல் ஆர்டரும் எடுத்தாலே பெரிய லாபம் பார்க்கலாம்’’என்கிறவர் ஒரு நாள் பயிற்சியில் செட்டிநாடு இட்லி மற்றும் உப்புக் கொழுக்கட்டை, ஆப்பம், வெள்ளைப் பணியாரம் உள்ளிட்ட 5 அயிட்டங்கள் தயாரிக்கக் கற்றுத் தருகிறார். கட்டணம் 500 ரூபாய்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.