July 20, 2017
கொண்டை கடலை குருமா செய்ய தெரியுமா !
தேவையான பொருள்கள்:
வெள்ளை கொண்டைக்கடலை - 100 கிராம்
தக்காளி - 1
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மல்லித்தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/ 2 தேக்கரண்டி
சென்னா மசாலா தூள் - 1 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
கரம் மசாலா பொடி - 1 தேக்கரண்டி
மேத்தி இலை - சிறிது (காய்ந்த வெந்தய இலை)
கொத்தமல்லி - சிறிது
உப்பு - தேவையான அளவு
அரைக்க தெவையான பொருட்கள்:
தேங்காய் துருவல் - 100 கிராம்
முந்திரிப்பருப்பு - 5
தாளிக்க தேவையான பொருட்கள்:
எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
பட்டை - 2
கிராம்பு - 2
பெருஞ்சீரகம் (சோம்பு) - 1 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
செய்முறை:
கொண்டைக்கடலையை 8 மணி நேரம் ஊற வைத்து சிறிது உப்பு சேர்த்து குக்கரில் 4 அல்லது 5 விசில் வைத்து எடுத்து கொள்ளவும். பெரிய வெங்காயத்தை நீளவாக்கிலும், தக்காளியை பொடியாகவும், பச்சை மிளகாயை இரண்டாகவும் கீறி வைக்கவும். தேங்காய் துருவல், முந்திரிப்பருப்பு இரண்டையும் மிக்ஸ்சியில் அரைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, பெருஞ்சீரகம் போடவும். பெருஞ்சீரகம் பொரிந்ததும் பச்சை மிளகாய், வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும். பச்சை வாடை போகும்வரை வதக்கி பிறகு தக்காளியை சேர்க்கவும். பின்னர் மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், சென்னா மசாலா தூள், கரம் மசாலா பொடி சேர்த்து ஒரு நிமிடம் கிளறி அதோடு அவித்து வைத்துள்ள கொண்டைக்கடலையை சேர்த்து கிளறவும்.
பிறகு அதனுடன் ஒரு கப் தண்ணீர் வேக வைத்து மசாலா வாடை அடங்கியதும், தேங்காய் கலவை மற்றும் உப்பு சேர்த்து கொத்தமல்லி, மேத்தி இலை சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும். சுவையான கொண்டைக்கடலை குருமா தயார்.
கொண்டை கடலை குருமா செய்ய தெரியுமா !
Reviewed by Admin
on
July 20, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.