July 30, 2017
சாலையில் நடந்து சென்றவர் பலி: சென்னையில் தொடரும் பைக் ரேஸ் விபத்துகள் !
சென்னையில் கல்லூரி மாணவர்கள் குடிபோதையில் நடத்திய பைக் ரேஸில் சிக்கி சாலையில் நடந்து சென்றவர் பலியானார்.
சென்னை ஒண்டிக்குப்பத்தில் மாணவர்கள் பைக் ரேஸ் நடத்தினர். அப்போது அவர்கள் அதிவேகமாக வாகனத்தை ஓட்டினர்.
அப்போது சாலையில் நடந்து சென்ற ஒருவர் மீது பைக் மோதியது. இதில் நிலை குலைந்து விழுந்த அவர் பலியாகினார். ரேஸ் நடத்திய மாணவர்கள் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
விபத்தை ஏற்படுத்திய மாணவர்கள் விஜய் மற்றும் சீனிவாசன் ஆகியோர் படு காயமடைந்துள்ளனர். இதுதொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் வார இறுதி நாள்களில் நடத்தப்படும் இதுபோன்ற பைக் ரேஸ்களால் அப்பாவிகள் பலியாவது தொடருகிறது. இவற்றை போலீஸார் கட்டுப்படுத்த வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கை.
சாலையில் நடந்து சென்றவர் பலி: சென்னையில் தொடரும் பைக் ரேஸ் விபத்துகள் !
Reviewed by Admin
on
July 30, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.