Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 22, 2017

சூப்பரான டிபன் " பாஜ்ரா பூரி"


மாலையில் குழந்தைகளுக்கு ஏதாவது வித்தியாசமாக டிபன் செய்து கொடுக்க நினைத்தால் பாஜ்ரா பூரி செய்து கொடுக்கலாம். இந்த பூரி காரசாரமாக சாப்பிட சூப்பராக இருக்கும்.


தேவையான பொருட்கள் :

கம்பு மாவு - 2 கப்,
வெள்ளை எள் - 2 டீஸ்பூன்,
சீரகத் தூள் - 1 டீஸ்பூன்,
மாங்காய்த் தூள் - 1 டீஸ்பூன்,
வெந்தயக்கீரை - 2 கட்டு
பொடித்த சர்க்கரை - 1/2 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - சிறிது,
இஞ்சி, பூண்டு விழுது - தலா 1/2 டீஸ்பூன்,
உப்பு, தண்ணீர், பொரிப்பதற்கு எண்ணெய் - தேவைக்கு,
மிளகாய்த் தூள் - 1/2 டீஸ்பூன்,
தனியாத் தூள் - 1/2 டீஸ்பூன்.



செய்முறை :

* வெந்தயக்கீரையை காம்பு இல்லாமல் பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் கம்பு மாவு, வெள்ளை எள், சீரகத் தூள், மாங்காய்த் தூள், வெந்தயக்கீரை, பொடித்த சர்க்கரை, மஞ்சள் தூள், இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய்த் தூள், தனியாத் தூள் சேர்த்து நன்றாக கலக்கவும்.

* கலந்த மாவில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பூரி மாவு பதத்திற்கு கெட்டியாக பிசைந்து, அதன் மேல் எண்ணெய் 1 டீஸ்பூன் தடவி மூடி 15 நிமிடங்கள் வைக்கவும்.

* பின் மாவை எடுத்து உள்ளங்கையில் எண்ணெய் பூசிக் கொண்டு நன்கு உருட்டவும்.



* பிசைந்த மாவில் இருந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி உள்ளங்கை கொண்டு பூரி மாதிரி கையில் மெல்லியதாக பூரிகள் தட்டவும். இந்த பூரிகள் கட்டையால் உருட்டக்கூடாது.

* கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் ஒவ்வொறு பூரிகளாக போட்டு பொரிக்கவும். கரண்டி கொண்டு அழுத்தியும் அதன் மேல் எண்ணெயை கொஞ்ச கொஞ்சமாக ஊற்றியும் பொரித்து எடுக்கவும். திருப்பிப் போட்டு பொரித்து எடுத்து வடித்து பரிமாறவும்.

* சூப்பரான பாஜ்ரா பூரி ரெடி.

* இந்த பூரிக்கு தொட்டு கொள்ள எதுவும் தேவையில்லை. விருப்பப்பட்டால் தயிர் பச்சடி, உருளைக்கிழங்கு மசாலா வைத்து சாப்பிடலாம்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.