April 16, 2017
மனமனக்கும் மட்டன் சுக்கா
என்னென்ன தேவை?
மட்டன் - கால் கிலோ
வெங்காயம் - 1
இஞ்சி – சிறு துண்டு
பூண்டு - 6 பல்
பட்டை, கிராம்பு - சிறிதளவு
மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
தனி மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - சிறிதளவு
முந்திரி – 10
சோம்பு – அரை டீஸ்பூன்
தேங்காய் - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை:
வெங்காயம், இஞ்சி, பூண்டு, சோம்பு இவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள். அரைத்த விழுது, மிளகாய்த் தூள், மிளகுப் பொடி, மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு ஆகியவற்றைக் கறியோடு நன்றாகக் கலந்து வைத்துக்கொள்ளுங்கள். அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து குக்கரில் ஐந்து விசில் வரும்வரை வேகவிடுங்கள்.
வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கிராம்பு, பட்டை போட்டுத் தாளியுங்கள். வேகவைத்த கறியை அதில் சேர்த்து நன்றாகச் சுருண்டு வரும்வரை வதக்குங்கள். வறுத்த முந்திரி, தேங்காய்த் துண்டுகளைச் சேருங்கள். சிறிதளவு கொத்தமல்லி, கறிவேப்பிலையைச் சேர்த்து இறக்கிவையுங்கள். சாம்பார் சாதம், தயிர் சாதம் போன்றவற்றுக்கு இதைத் தொட்டுக்கொள்ளலாம்.
மனமனக்கும் மட்டன் சுக்கா
Reviewed by மறத்தமிழன்
on
April 16, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.