Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 26, 2017

வீட்டிலேயே செய்யலாம் "பீட்ஸா தோசை"


 தோசை என்றால் குழந்தைகளுக்கு பிடிக்காது. ஆனால் அந்த தோசையில் காய்கறிகள் சீஸ் போட்டு பீட்ஸா போல் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.


தேவையான பொருட்கள் :

தோசை மாவு - ஒரு கப்
பெரிய வெங்காயம் - 1
குடமிளகாய் - 1
தக்காளி1 - 1
காளான் - 3
தக்காளி சாஸ் - இரண்டு டேபிள்ஸ்பூன்
சீஸ்(துருவியது) - இரண்டு டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்



செய்முறை :

* வெங்காயம், குடமிளகாய், தக்காளி, காளானை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* சீஸை துருவிக்கொள்ளவும்.

* அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், குடமிளகாய், தக்காளி, காளான் ஆகியவற்றை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கிக் கொள்ளவும்.

* அடுத்து அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து ஒரு கரண்டி மாவை சற்று கனமாக ஊற்றவும்.

* தோசை அரைவேக்காடு வெந்ததும், அதன் மேற்புறத்தில் ஒரு டேபிள்ஸ்பூன் அளவு தக்காளி சாஸை ஊற்றி பரப்பி விடவும்.

* அடுத்து அதில் மேல் வதக்கிய காய்கறிகளை பரப்பி விடவும்.

* கடைசியாக துருவிய சீஸையும் மேலே தூவி பரப்பிவிட்டு வேகவிடவும்.

* சீஸ் உருகியதும் பீட்ஸா தோசையை எடுத்து சூடாகப் பரிமாறலாம்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.