Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 29, 2017

சுவையான மொகல் மட்டன் பிரியாணி செய்வது எப்படி


பிரியாணிகளில் பலவகைகள் உண்டு. அவற்றில் உலகத்திற்க்கே பிரியாணி ரெசிபியை உருவாக்கிய
மொகல் இளவரசி மும்தாஜ் தான் என்பது வரலாறு
 மொகல் பிரியாணி மிகவும் சுவையாக இருக்கும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

மட்டன் - 1 கிலோ
பாசுமதி அரிசி - 3 கப்
தயிர் - 1 1/2 கப்
வெங்காயம் - 4 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 3 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 6
மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 1/2 டீஸ்பூன்
தனியா தூள் - 1 1/2 டீஸ்பூன்
கரம்மசாலா - 1 டீஸ்பூன்
பட்டை - 2
மிளகு - 6
கிராம்பு - 5
ஏலக்காய் - 5
பிரியாணி இலை - 1
குங்குமப்பூ - 1 சிட்டிகை (பாலில் ஊற வைத்தது)
முந்திரி - 15
உலர் திராட்சை - 20
நெய் - தேவைக்கு
எண்ணெய் - தேவைக்கு
உப்பு - தேவையான அளவு

செய்முறை :

* வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* மட்டனை பொடியாக நறுக்கி நன்கு சுத்தமாக நீரில் கழுவி, நீரை முற்றிலும் வடித்து ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.

* கழுவி மட்டனில் உப்பு, மிளகாய் தூள், சீரகப் பொடி, தனியா தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து பிரட்டி, 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.

* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை போட்டு 5 நிமிடம் வதக்க வேண்டும்.

* பின்னர் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கிய பின் பச்சை மிளகாய் போட்டு வதக்கி விட வேண்டும்.

* பிறகு அதில் ஊற வைத்துள்ள மட்டனை போட்டு 5 நிமிடம், வதக்க வேண்டும். அதுவும் மட்டனில் அனைத்து மசாலாக்களும் சேருமாறு வதக்கி, மூடி போட்டு 10 நிமிடம் தீயை குறைவில் வைத்து மட்டனை வேக வைக்க வேண்டும்.

* மற்றொரு அடுப்பில் குக்கரை வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், பிரியாணி இலை, மிளகு, ஏலக்காய், பட்டை மற்றும் கிராம்பு சேர்த்து தாளித்த பின் முந்திரி, உலர் திராட்சையை போட்டு தீயை குறைவில் வைத்து வதக்கி விட்டு, பாசுமதி அரிசியை நீரில் கழுவி குக்கரில் போட்டு, அரிசியை 5 நிமிடம் வறுக்க வேண்டும்.

* இந்த நேரத்தில் மற்றொரு அடுப்பில் உள்ள மட்டனானது பாதி அளவு வெந்து கிரேவி பதத்தில் இருக்கும்.

* இப்போது மட்டன் கிரேவியை குக்கரில் அரிசியுடன் சேர்த்து நன்றாக பிரட்டி, 3 கப் தண்ணீர் ஊற்றி, தயிர், தேவையான அளவு உப்பு சேர்த்து, தீயை குறைவில் வைத்து, விசில் போடாமல் குக்கரை மூடி 20 நிமிடம் அடுப்பில் வைக்க வேண்டும்.

* மட்டன் மற்றும் அரிசியானது நன்கு வெந்துவிட்டால், அதன் மேல் பாலில் ஊறவைத்த குங்குமப்பூ, நெய்யை மேலே ஊற்றி கிளறி, இறக்கி விட வேண்டும்.

* சுவையான மொகல் பிரியாணி ரெடி.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.