April 18, 2017
இறால் சில்லி 65 - படத்தை பார்க்கும்போதே நாக்கில் எச்சில் ஊறுதே!
தேவையான பொருட்கள்:
இறால் - 20
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
மசாலாவிற்கு
மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி
கரம் மசாலா - 2 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 தேக்கரண்டி
எலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி
சோள மாவு - 14 கிண்ணம்
கொத்துமல்லி - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - சிறிது
செய்முறை: முதலில் இறாலை தோல் நீக்கி நன்கு சுத்தம் செய்து எடுத்துக் கொண்டு அத்துடன் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து மசாலாவிற்கு கொடுத்துள்ளவற்றை சேர்த்து நன்கு பிரட்டி 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெயை ஊற்றி சூடேற்றி இறால் துண்டுகளை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், இறால் சில்லி 65 ரெடி
இறால் சில்லி 65 - படத்தை பார்க்கும்போதே நாக்கில் எச்சில் ஊறுதே!
Reviewed by மறத்தமிழன்
on
April 18, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.