Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 26, 2016

தமிழக உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு:அக்டோபர் 17 மற்றும் 19ம் தேதி 2 கட்டங்களாக நடைபெறுகிறது


மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, கிராம பஞ்சாயத்து உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பதவி காலம் வருகிற அக்டோபர் மாதம் 24-ந்தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் தமிழக உள்ளாட்சி தேர்தல் தேதியை மாநில தேர்தல் கமிஷனர் சீத்தாராமன் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழக உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்பு மனுத்தாக்கல் - செப்டம்பர் 26 ( நாளை ) முதல் தொடங்குகிறது. வேட்பு மனுத்தாக்கல் செய்ய கடைசிநாள் - அக்டோபர் 3-ம் தேதி ஆகும்.  வேட்பு மனுக்கள் சரிபார்ப்பு - அக்டோபர் 4-ம் தேதி.  வேட்பு மனுவை திரும்ப பெறுவதற்கான கடைசி நாள் - அக்டோபர் 6 தேதி.

தமிழக உள்ளாட்சி தேர்தல் ஓட்டுப்பதிவு - அக்டோபர் 17 (10 மாநகராட்சிகள்), 19-ம் தேதி சென்னை, மற்றும் திண்டுக்கல்,(2 மாநகராட்சிகள் நடைபெறுகிறது.
உள்ளாட்சி தேர்தல் ஓட்டு எண்ணிக்கை - அக்டோபர் 21 நடைபெறுகிறது. காலை 8.30 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. வெற்றி பெறும் உறுப்பினர்கள் அக்டோபர் 26ம் தேதி பதவியேற்கவுள்ளனர். நேரடி தேர்தலுக்கு பின்பு 13,362 பதவிகளுக்கான மறைமுகத்தேர்தல் நடைபெறவுள்ளது.
சென்னையில்19ம் தேதி உள்ளாட்சித்தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.  வாக்குச்சாவடி அலுவலர்கள் ஆறரை லட்சம் பேர் பணியில் அமர்த்தப்படுகின்றனர்.  உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு 91,098  வாக்குச்சாவடிகளில் நடைபெறுகிறது.  நேரடி தேர்தல் முடிவுற்று, மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடைபெறும்.  தேர்தல் பணிகளை பார்வையிட 37 தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
நேரடி தேர்தலுக்கு பின் 13,362 பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடைபெறும். உள்ளாட்சி தேர்தலில் 5.8 கோடி மக்கள் வாக்களிக்க உள்ளனர். உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால்  இன்று முதல் தேர்தல்  விதிமுறைகள் அமலுக்கு வந்தது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.